பாட்டியல் - நூற்பா எண் 57

       181


 

     ‘அகவலும் கலிப்பா வும்பரி பாடலும்

      பதிற்றைந்து ஆதி பதிற்றைம்பது ஈறா

      மிகுத்துடன் தொகுப்பன மேற்கணக்கு எனவும்

      வெள்ளைத் தொகையும் அவ்வகை எண்பெறின்

      எள்ளறு கீழ்க்கணக்கு எனவும் கொளலே.’       

                                      - பன். பாட். 346

     ‘ஐம்பது முதலா ஐந்நூறு ஈறா

      ஐவகைப் பாவும் பொருள்நெறி மரபின்

      தொகுக்கப் படுவது மேற்கணக்கு ஆகும்.’         

 - 347

      ‘அடிநிமிர்பு இல்லாச் செய்யுள் தொகுதி

      அறம்பொருள் இன்பம் அடுக்கி அவ்வத்

      திறம்பட உரைப்பது கீழ்க்கணக்கு ஆகும்.’             

 - 348

     ‘நெடிலடிச் செய்யுளால்,

      நிலையில் தொகுத்தும் குறுந்தொகை முன்பின்

                             நெடுந்தொகையாய்க்

      கலியில் தொகுத்துக் கலித்தொகைபோலாம்

                            தொகைநிலையே.’    

- நவ. 12

    ‘தொகைநிலைச் செய்யுள் தோன்றக் கூறின்

     ஒருவன் உரைத்தவும் பல்லோர் பகர்ந்தவும்

     பொருள்இடம் காலம் தொழில்என நான்கினும்

     பாட்டினும் அளவினும் கூட்டிய தாகும்.’

                                     - தண்டி. தொ. வி. 253

     நெடிலடிச் செய்யுள் தொகுத்தது நெடுந்தொகையும்

          நேர் குறிலடிச் செய்யுளால்

     நிரவித் தொகுத்தது குறுந்தொகை; கலிப்பாவின்

          நேர் தொகும் தொகையுமாய்

     முடிவதே போல்வன தொகைச்செய்யுளாம்.’        

 - பி. தீ. 18

     ‘நெடிலடிப் பாவால் தொகுத்தது நெடுந்தொகை;

     குறளடிப் பாவால் தொகுத்தது குறுந்தொகை;

     கலியில் தொகுத்தது கலித்தொகை போல்வன;

     தொகைநிலைச் செய்யுள் எனச்சொலப் படுமே.’

                                      - மு. வீ. யா. ஒ. 120

                                                     57