184                      இலக
184

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

                          விளக்கம்

 

    முதலில் வெண்பாவும் அடுத்துக் கலித்துறையும் அடுத்து மீண்டும்
 வெண்பாவும் இவ்வாறாக அந்தாதித் தொடையான் இருபது பாடப்படுவது
 இரட்டை மணிமாலையாம்.

 

                     ஒத்த நூற்பாக்கள்

 

     ‘வெண்பா முதலாக் கலித்துறை பின்வரும்

     இந்த இருபது இரட்டைமணி மாலை.’         

 - பன். பாட். 254

    ‘ஆதி அந்தம் வெண்பாக் கலித்துறை

     ஏதமின்றி வருவது இரட்டைமணி மாலை

     அதுவே நாலைந்து இயலும் என்ப.’             

’’     255

    ‘ஆய்ந்த இரட்டை மணிஇருபான் - ஏய்ந்தசீர்

     வெண்பா கலித்துறையாம்.’                  

- வெண். பாட். செ. 17

    ‘இரட்டைமணி,

     தருபாஇருபது வெண்பாக் கலித்துறைதாம் இவையாம்.’

- நவ. 36

    ‘மன்இருபான் வெள்ளைகலித் துறைஇரட்டை மணிமாலை.’

                                                     - சிதம். பா. 31

    இரட்டைமணி மாலையாம் இணைந்தபப் பத்தாய்

    வெண்பா கலித்துறை விரவிப் பாடலே.’       

 - தொ. வி. 278

    ‘கருதும் வெண்பாக் கலித்துறை விரவி

          இருபது வழுத்துவது இரட்டைமணி மாலை.’

                                             - பி. ம. 11

    ‘வெண்பாக் கலித்துறையும் இருபதுஅந் தாதியாய்

          மேவுதொடையாய் வருவதின்

    மிக்க ஆசிரிய விருத்தம் ஒருபத்துநேர்

          வெண்பாவும் ஒருபத்துடன்

    பண்பாய் உரைப்பது இரட்டைமணி மாலையாம்.’

  - பி. தீ. 10