பாட்டியல்
- நூற்பா எண் 59, 60 |
185 |
‘இருபது அந்தா தித்துவெண் பாவும்
கட்டளைக் கலித்துறை யுங்கலந்து உரைத்தல்
இரட்டை மணிமாலை என்மனார் புலவர்.’
- மு. வீ. யா. ஒ. 88
59
மும்மணி மாலை
820.
வெண்பாக் கலித்துறை அகவல்அந் தாதிப்
பண்பால் முப்பது பகரின் மும்மணி
மாலை என்று வகுத்தனர் புலவர்.
இது
மும்மணிமாலை ஆமாறு கூறுகின்றது.
இ - ள்; வெண்பாவும் கலித்துறையும் அகவலும் அந்தாதியாக
முப்பது பாடின் அதனை மும்மணிமாலை என்று கூறுவர்
புலவர் என்றவாறு.
(60)
ஒத்த நூற்பாக்கள்
‘மிகுந்த வெள்ளை கலித்துறை அகவல்
விருத்தம் மும்மணி விளம்பும் அந்தாதி.’
- பன். பாட். 256
‘வெண்பாக் கலித்துறை அகவல் விருத்தம்
வண்பா மூன்றவை மும்மணி மாலை.’
வெள்ளை கலித்துறை
அகவல் விருத்தம்
கொள்வ மும்மணி கோத்தஅந் தாதி.’
- பன். பாட். -
பிற்சேர்க்கை
‘மன்னிய வெண்பா கலித்துறை மன்னர்பா
முன்னியமுப் பால்மும் மணிமாலை........
ஈட்டியஅந் தாதியாம்
ஏய்ந்து.’
- வெண். பாட். செ. 16
மும்மணிமாலைசொல்லின், அந்நான்மறைப்பா,
கலித்துறை, ஆசிரியம்.’
- நவ. 35
|