186
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம்
|
‘வெள்ளை, நற்கலியின்துறை அகவல் அந்தாதித்த
நடைமுப்பான் மும்மணி மாலைப்பேர்.’
- சிதம். பாட். 3
‘மும்மணி மாலையாம் முறைமாறி வெள்ளை
கலித்துறை அகவல் கதிபெறும் செய்யுளே.’
- தொ. வி. 281
‘வெண்பா கலித்துறை அகவற் பாமூன்று
அந்தா தித்து முப்பஃது இயம்பின்
மும்மணி மாலை.’
- பி. ம. 20
‘பகரும்வெண் பாக்கலித்துறை அகவல் முப்பதும்
பன்னுதொடை அத்தாதியாய்ப்
பாடல்மும் மணிமாலை.’
- பி. தீ. 14
‘ஆதிப் பாக்கலித் துறையும் அகவலும்
அந்தா தித்தா றைந்தியம் புவது
மும்மணி மாலையாம் மொழியுங் காலே.’
- மு. வீ. யா. ஒ. 106
60
நான்மணி மாலை
821.
வெண்பாக் கலித்துறை விருத்தம் அகவல்
பின்பேசும் அந்தா தியின்நாற் பதுபெறின்
நான்மணி மாலை ஆம்என நவில்வர்.
இது
நான்மணிமாலை ஆமாறு கூறுகின்றது.
இ - ள்: வெண்பாவும் கலித்துறையும் அகவலும்
பின்னும் முன்னும்
ஒன்றிய விருத்தமும் மேற்கூறிய
அந்தாதியான் நாற்பது வரின்
நான்மணிமாலையாம்
என்று கூறுவர் புலவர் என்றவாறு.
(61)
|