190 |
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம்
|
‘அகவல் முதற்பாக் கலித்துறையான் ஒன்றுஅந்தாதிவரத்
தகும் ஒருபா ஒருபஃது ஆகும்.’
- நவ. 15
‘எப்பாட்டேனும் தீதில்ஒருபான் ஒருபா
ஒருபஃதென்ப.’
- சித. பாட். 34
‘ஒருபா ஒருபதாம் உரைப்பரும் வெண்பா
அகவல் கலித்துறை அவற்றுள் ஒன்றால்
பத்தெனப் பாடிப் பகுத்த செய்யுளே.’
-
தொ. வி. 264
‘ஓர்பாவில் அந்தாதித்து
ஈரைந்தாச் சொல்வது ஒருபா ஒருபதாம்.’
- பி. ம. 23
‘கலித்துறையி னாலும் நேர்வெண் பாவினால்அ
கவலாயினும் ஒவ்வொன்றினைக்
கணித்துஒன்று பப்பத்தின் அந்தாதி யாகவே
கழறும்ஒருபா ஒருபஃது.’
- பி. தீ.
21
‘அகவல் வெண்பாக் கலித்துறை ஆகிய
இவற்றுள் ஒன்றினால் அந்தாதித் தொடையாய்
ஒருபஃது உரைப்பது ஒருபா ஒருபது.’
- மு. வீ. யா. ஒ. 127
63
ஒலி அந்தாதி
824.
ஈண்டிய வண்ணம்ஈ ரெண்கலை முப்பான்
ஆண்டது ஒலிஅந் தாதி ஆகும்.
இஃது
ஒலிஅந்தாதி ஆமாறு கூறுகின்றது.
இ - ள்: பலசந்தம் கூடிய பதினாறு கலைவகுப்பானாய
முப்பது
எண்ணான் ஆளப்பட்டது ஒலிஅந்தாதியாம் என்றவாறு.
(64)
|