பாட்டியல்
- நூற்பா எண் 64 |
191 |
‘தத்தம் இனத்தில் ஒப்புமுறை பிறழாது
நாலடி ஈரெண் கலைஒரு முப்பது
கோலியது ஒலிஅந் தாதி ஆகும்.’
- பன். பாட்.
267
‘ஈரொலி ஆகிய எண்ணான்கு கலையெனச்
சீர்இயற் புலவர் செப்பினர் கொளலே.’
’’
268
‘வண்ணகம் என்பது ஒலிஎனப் படுமே.’
’’
269
‘ஈண்டிய முப்பதாய் ஈரெண் கலைவண்ணம்
மூண்டதொலி அந்தாதி முப்பதாம்.’
- வெண். பாட். செ.
‘ஈட்டியஈரெண் கலைவண்ணச் செய்யுள் இயைந்து
முப்பான்
கூட்டிய நீடுஒலி அந்தாதி.’
- நவ. 18
பதினாறுகலை ஓரடியாக வைத்து இங்ஙன் நாலடிக்கு
அறுபத்துநாலு கலை வகுத்துப் பலசந்தமாக வண்ணமும்
கலைவைப்புத் தவறாமல்
அந்தாதித்து முப்பது செய்யுள்
பாடுவது. சிறுபான்மை எட்டுக்கலையானும்
வரப்பெறும்.
அன்றியும் வெண்பா அகவல் கலித்துறை ஆகிய
இம்மூன்றையும்
பப்பத்தாக அந்தாதித்துப் பாடுவதுமாம்.
- தொ.
வி. 283. உரை.
‘வகுப்பின் ஈரெண் வண்ணச் செய்யுளுள்
ஓங்கிய முப்பான் ஒலிஅந் தாதி.’
-
பி. ம. 14
‘முறையில ஈரெண் கலையையும்
முடியஓர் அடியதாய் இங்ஙனம் நாலடியின்
முடிதல் எண்ணெண் கலையதாம்;
அடிகள்பல சந்தமாய் வண்ணமும் கலைவைப்பும்
அந்தாதி தவறாமலே
அலகு முப்பதுசெய்யுள் பாடுவதும் சிறுபான்மை
ஆகும்; எட்டுக்கலையெனும்
தொடர்புறும்;அன்றி வெண்பா அகவலும் கலித்
துறையான இம்மூன்றையும்
சோர்வில்பப் பத்தாக அந்தாதி யாகவும்
சொல்ஒலியல் அந்தாதியே.’
-
பி. தீ. 18
|