பாட்டியல்
- நூற்பா எண் 65, 66 |
193 |
‘முதல்வன்ஊ ரின்பேரான் மொழிவன வெண்பா
அதனைத்தொண் ணூறெழுபா னைம்பான் - மதர்விழியாய்!
இன்னிசைவெண்
பாவிற்கு மொக்கும் இயற்பெயர்
அன்னவற்றால் கட்டுரைத்தார் ஆய்ந்து.’
- வெண். பாட். 14
‘ஊர்பெயர்சார நேர்இன்னிசை வெண்பாத்
தொண்ணூறு
ஏழ்ஐம்பான்.’
-
நவ. 10
‘நிலைப்பாட்டு டைத்தலைவன் நாமமது சாரஇன்
னிசைவெள்ளை தொண்ணூ றேனும்
சேர்ந்தஎழு பதேனும் அல்லது ஐம்பதேனும்
சிறக்க உரைபெயர் இன்னிசையே;
செம்பாட்டு டைத்தலைவன் உரைமுன் செய்யுள்தொகை
செப்பல் ஊர்இன்னிசை யதே.’
- பி. தீ. 22
‘பாட்டுடைத் தலைமகன் பெயரைச் சார
இன்னிசை வெண்பா எழுபான் இருபஃது
ஏனும் எழுபா னேனும் ஐம்பஃ
தேனும் உரைப்பது பெயர்இன் னிசையே.’
- மு. வீ. யா. ஒ. 131; தொ. வி. 283. உரை.
‘பாட்டுடைத் தலைமகன் ஊரைச் சார
இன்னிசை வெண்பா எழுபான் இருபஃ
தேனும் எழுபா னேனும் ஐம்பஃ
தேனும் இயல்புவது ஊர்இன் னிசையே.’
- மு. வீ. யா. ஒ. 132; தொ. வி. 283. உரை.
65
வருக்கமாலை
826.
வருக்கத் தினைச்சொலல் வருக்க மாலை.
இது
வருக்கமாலை ஆமாறு கூறுகின்றது.
இ - ள்: மொழிக்கு முதலாம் வருக்க எழுத்தினுக்கு
ஒவ்வொரு கவி
கூறல் வருக்கமாலையாம் என்றவாறு.
25-26
|