194 |
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம்
|
கூறுதல் அவ்வெழுத்தை முதலாகக்கொண்டு கூறுதல்
என்றவாறு. உயிரானும் க ச த ந ப ம வ என்னும் உயிரோடு
கூடிய மெய் ஏழானுமாக எட்டு ஆசிரியப்பா வந்தால்
அவை வருக்கமாலை எனவும் கூறுவாரும் உளர்.
(66)
ஒத்த நூற்பாக்கள்
‘மொழிக்குமுத லாகிய எழுத்துக் கெல்லாம்
வருக்கம் உரைப்பது வருக்க மாலை.’
- பன். பாட். 283
‘பன்அகவல் எட்டாய் வருக்கஎழுத் தான்வருமேல்
முன் வருக்க மாலை மொழி.’
- வெண்.
பாட். செ. 36
மொழி முதலாம்
வருக்க எழுத்திற்கு ஓர்தூக்கு வருக்கமாலைப் பெயரே.’
- நவ.
‘வர்க்கஉயிர்
கசதநப மவஎட்டின் சூழ்
மருவு அகவல் வரின் வருக்கமாலை.’
- சித. பாட். 33
‘வருக்க மாலையாம் வருக்க எழுத்தென
உயிரொடு கசதந பமவ எனஎண்
வரிமுதல் வந்து வரும்எண் அகவலே.’
தொ.
வி. 267
‘மொழிமுதல் உயிர்மெய் வருக்கத்தொகை
போற்றி
அகவலால் புகல்வது வருக்க மாலை.’
- பி. ம. 19
‘செப்பும் மொழிக்கு முதலாம்
பெலம்மிகும் வருக்கத்து எழுத்திற்கு ஒவ்வோர்செய்யுள்
பேசுவது வர்க்கமாலை.’
- பி. தீ. 12
‘முதலாம் வருக்க எழுத்தினுக்கு ஒவ்வொரு
செய்யுள் அணிபெறச் செப்புவது அதுதான்
வருக்க மாலையாம் வழுத்துங் காலே.’
- மு. வீ. யா. ஒ. 98
66
|