பாட்டியல் - நூற்பா எண் 68, 69, 70

   197


 

 

     ‘மேற்குலத் திற்பிறந்த மின்னாளை வெண்பா

     ஒன்பதா லும்வகுப்பு ஒன்பதி னாலும்

     வழுத்துவது மங்கல வள்ளை ஆகும்.’    

- மு. வீ. யா. ஒ. 150

 தொ. வி. 283 உரை.

                                                       68

 

                  வேறுவகை இரட்டை மணிமாலை

 

829.    வெண்பா விருத்தம் வியப்புற இருபஃது

       எண்பட உரைப்பது இரட்டைமணி மாலை.

 

இது வேறொரு வகையான் இரட்டைமணி மாலை ஆமாறு கூறுகின்றது.
 

     இ - ள்: வெண்பாப் பத்தும் விருத்தம் பத்தும் அந்தாதித்
தொடையான் பாடுதலும் இரட்டைமணி மாலையாம் என்றவாறு.
 

     ‘உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை. மாலை என்பதனான் அந்தாதி
 என்பது பெற்றாம்.                                                              

(69)

 

                            ஒத்த நூற்பா

 

     ‘பெற்றசீர் மன்விருத்தம் வெண்பாப் பெயர்ந்திருபான்

     மற்றை இரட்டை மணிமாலையாம்.’

- வெண். பாட். செ. 36

                                                       69

 நேரிசை

 

830.    இன்னிசை போல இறைவன் பெயர்ஊர்

       தன்னின் இயல்வது தான்நே ரிசையே.

 

இது நேரிசை ஆமாறு மாட்டேற்றானே அறிவிக்கின்றது.