200
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம்
|
காப்புமாலை
832.
காப்புமூன்று ஐந்துஏழ் காப்பு மாலையாம்.
இது
காப்புமாலை ஆமாறு கூறுகின்றது.
இ - ள்: காத்தலாக மூன்று கவியானும் ஐந்து கவியானும்
ஏழு கவியானும் பாடுவது காப்புமாலையாம் என்றவாறு.
(72)
ஒத்த நூற்பா
‘மூன்றுஐந்து ஏழ்பாத் தெய்வம் காக்கக்
காப்புமாலை.’
- நவ.
6
‘அரிய தெய்வம் காத்தலாக மூன்றுஐந்து ஏழின்
அறை செய்யுள் காப்பு மாலை.’
-
பி. தீ. 13
‘கடவுள் காத்த லாக ஒருமூன்று
ஐந்துஏ ழானும் அறைவது காப்பு
மாலை எனப்பெயர் வைக்கப் படுமே.’
- மு. வீ. யா. ஒ. 100;
தொ. வி. 283 உரை.
வேனில் மாலை
833.
வேனிலைப் பாடுதல் வேனில் மாலை
இது
வேனில்மாலை ஆமாறு கூறுகின்றது.
இ - ள்: இளவேனிலையும் முதிர்வேனிலையும் சிறப்பித்துப்
பாடுதல்
வேனில் மாலையாம் என்றவாறு.
(73)
ஒத்த நூற்பாக்கள்
‘வேனிற் புகலல் ஆன்ற வேனில் மாலை.’
- நவ. 6
|