பாட்டியல் - நூற்பா எண் 73, 74

201


 

‘அருவேனில் முதுவேனிலைச் சிறப்பித்து ஓதல்

ஆகுமே வேனில் மாலை.’                                              -பி. தீ. 13

 

‘வேனி லொடுமுதிர் வேனிலும் புனைந்து

விளம்புதல் வேனில் மாலை ஆகும்.’                -மு. வீ. யா. ஒ. 101;

                                             தொ. வி. 283 உரை

73

பல்சந்த மாலை

 

834. பத்து முதலாப் பப்பத்து ஈறா

    வைத்த வண்ண வகைபத் தாகப்

    பல்சந்த மாலை பகரப் படுமே.

 

இது பல்சந்தமாலை ஆமாறு கூறுகின்றது.

 

        இ - ள்: பத்துக்கவி முதலாக நூற்கவி ஈறாக வைக்கப்பட்ட சந்தம்
பத்துப்பத்தாகப் பல்சந்தமாலை கூறப்படும் என்றவாறு.       

        (74)

ஒத்த நூற்பாக்கள்

 

‘சொன்ன கலம்பக உறுப்பவை நீக்கி

மன்னிய பத்து முதல்நூறு அளவா

வந்த மரபின் வரும்செயுள் முதலா

வந்தது பல்சந்த மாலை ஆகும்.’

 

-

 

 

 பன். பாட். 251

‘உறுப்பின் நீக்கிய பலவகைச் சந்தம்

இறுத்த வகையது இயற்பல சந்தம்.’

-

பிற்சேர்க்கை

‘பத்தாதி நூறந்தம் பல்சந்த மாலையாம்.’

-

வெண். பாட். செ. 9,

நவ. 37

‘அகவல் விருத் தம்வகுப்பா தல்பத் தாதி

அந்தம்நூ றாகும்பல் சந்த மாலை.’

-

   சித. பாட். 35

‘பலசந்த மாலை பப்பத்து ஒருசந்தம்

சிலஅந் தாதியாய்ச் செப்புமன விருத்தமே.’

-

 தொ. வி. 275