பாட்டியல் - நூற்பா எண் 77, 78

205


 

‘குலஅகவல் விருத்தமுறும் ஒன்பானாம்

ஒத்துநவ மணிமாலை.’

-

சித. பாட். 34

‘மன்னர் விருத் தத்துக்

கவிதோறும் தெய்வம் காப்பஎன்று உரைப்பது

நவமணி மாலை.’

-

தொ. வி. 274

‘விருத்தம் ஒன்று அந்தாதித்து ஒன்பது வழங்கல்

நவமணி மாலை’

-

பி. ம. 23

‘வரும் வெண்பா முதல் வேறுபடு பாவும்அப்

பாவினமதாய் ஒன்பதாய்ப்

 

பண்புபொருள் உறுசெய்யுள் அந்தாதி யாகவே

பாடல் நவமணி மாலையாம்.’

-

பி. தீ. 11

‘அந்தா தித்து வெண்பா ஆதிய

பாவும் பாவினமு மாக ஒன்பது

செய்யுள் அணிபெறச் செப்புவது அதுதான்

நவமணி மாலையாம் நாடுங் காலே.’

-

மு. வீ. யா. ஒ. 90

77

பரணி

 

838. ஆனை ஆயிரம் அமரிடை வென்ற

     மானவ னுக்கு வகுப்பது பரணி.

இது பரணி கொள்வோன் பெருமை கூறுகின்றது.

        இ - ள்: போரிடை ஆயிரம் களிற்றியானை படவென்ற
வீரத்தன்மை உடையோனுக்குப் பாடப்படுவது பரணி என்றவாறு.
 

(78)

‘யானை சாய்த்த அடுகளத்து அல்லது

யாவரும் பெறாஅர் பரணிப் பாட்டே.’

-

பன். பாட். 244

‘ஏழ்தலைப் பெய்த நூறுடை இபமே

அடுகளத்து அப்பால் பாடுதல் கடனே.’

’’

245