208
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம்
|
‘ஈறில் வணக்கம் கடைநிலம்பேய் என்பனவும்
வீறுசால் ஐயைக்கு மெய்ப்பேய்கள் - கூறித்
திறப்படச் சொல்லினவும் செப்பின் பிறவும்
புறப்பொருள்நூல் கொண்டு புகல்.’
- வெண். பாட். செ. 39
‘மற்றுஅது வானவர் வாழ்த்து, கடைவாழ்த்து, பாலைநிலப்
பெற்றி, பெருங்கானகம், இறையோன் பெருந்தேவி மகிழ்ந்து
உற்றுறை கோயில், அவளை உரைத்தல், அலகைக்குழாம்
சுற்றிய வண்ணம் அவைதம் பசிப்பிணி சொல்லுதலே.’
- நவ. 55
‘ஆங்குக்கனாத் துன்னி மித்தவகை அறிவித் திடலே
பாங்கில் பணிமொழி பொன்முடி மன்னவர் தம்பகையால்
தீங்கில் செருச்செய்து ஒருவர் திறல்வாகை சென்னிவைத்தல்
ஈங்கிற்செல வேறுஒருபேய் உவகை இசைத்திடலே.’
- நவ. 56
‘உண்டாம் உவகைதனை அவள்தான் மகிழ்ந்து ஓலக்கத்தில்
கொண்டாடல் காளிஅம் பேயினைக்கூறல் கொலைக் களம்தான்
கண்டு ஆர்ப்புஉறல் களம்வாழ்த்துதல் கைம்மலை
வெண்மருப்புத்
தண்டால் உலந்தவர் தம்பல் தரளம் தடுக்குதலே.’
- நவ. 57
‘முடிஅடுப்பில் தோய்வயிறு குழிசியில் மொய்குருதி
நெடிஉலைஏற்றி நிணம்பெய்து கோபநெருப்பு எரித்துத்
தொடியுடைத் தோள்துடுப்பில் துழாய்ஆக்கிப்
பேய்ஊட்டஅம்மை
வடிவுறஉண்டு ஆங்கு அடுதிறல் மன்னனை வாழ்த்துதலே.
- நவ. 58
‘இன்னும்அப் பேய்கள் இயல்கூர் பசிதீர உண்டுஇனிதாய்த்
துன்னிநின்று ஆடுதல் சூழும்கவந் தங்கள் தான்ஆடுதல்
மன்னும் புறப்பொருள் நூலோர்உரை வழுவா வகையே
முன்னும் மொழிந்தபடியே புணர்த்திக்கொள் மொய்குழலே.’
- நவ. 59
|