பாட்டியல் - நூற்பா எண் 82,83

213


இ - ள்: வெண்பா நூறு கலித்துறை நூறு அந்தாதித் தொடையால் கூறுதல்
நூற்றந்தாதி இலக்கணக கொள்கையாம் என்றவாறு.    

  (82)

 

ஒத்த நூற்பாக்கள்

 

     ‘வெண்பாக் கலித்துறை வேண்டிய பொருளில்

     பண்பா உரைப்பதந் தாதித் தொகையே.’

                                         - பன். பாட். 330

 

     ‘ஒத்தாய வெண்பா ஒருநூறா - ஒத்தசீர்

     அந்தாதி ஆகும் கலித்துறையும் அவ்வகையே

     வந்தால் அதன்பே ரவை.’           

 - வெண். பாட். செ. 9

 

     ‘கலித்துறை நூறு வெண்பாத் தோன்றுதலாகும்

                        நூற்றந்தாதி என்பர்.’       

- நவ. 6

 

     ‘மன்னிய கலித்துறை வெள்ளை நூறு

     அந்தாதித்து அப்பெயர் அந்தாதி ஆகும்.’      

  - பி. ம. 8

 

     ‘வெற்றி வெண்பா நூறினாலும் கலித்துறையின்

          வீறுறும் நூறினாலும்

     வினவி அந்தாதித்து உரைத்தல் நூற்றந்தாதி.’    

 - பி. தீ. 19

 

     ‘வெண்பா நூற்றினா லேனும் கலித்துறை

     நூற்றினா லேனும் அந்தாதித் துரைப்பது

     நூற்றந் தாதியாம் நுவலுங் காலே.’

                     - மு. வீ. யா. ஒ. 123; தொ. வி. 283. உரை.

                                                     82

 

அட்டமங்கலம்

 

843. கடவுள் காக்க எனக்கவி இருநான்கு

    அடைவுற அகவல் விருத்தம் அதனால்

    வகுப்பது அட்ட மங்கலம் ஆகும்.

 

இஃது அட்டமங்கலம் ஆமாறு கூறுகின்றது.