214 |
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம்
|
இ - ள்: கடவுளைப்பாடி அக்கடவுள் காக்க எனக் கவி எட்டால் பொருளுற
அகவல் விருத்தம் அதனால் பாடப்படுவது அட்டமங்கலமாம்
என்றவாறு.
(83)
ஒத்த நூற்பாக்கள்
‘ஒருவனைக் காக்கஎன்று இறைவனை ஏத்திய
எண்வகை அகவல் விருத்தம் புணர்த்த
எண்ணிய அட்ட மங்கலம் என்ப.’
- பன். பாட். 299
‘இறைவனை ஏத்திய எண்வகை மங்கலம்
மறிதரும் பாவே அகவல் விருத்தம்.’
’’ 300
‘வேய்ந்த விருத்தங்கள் எட்டுஅட்ட மங்கலமாம்.’
- வெண். பா. செ. 24
‘இறைவனை ஏத்திய எட்டுஆசிரிய விருத்தம் வண்ணம்
மறைமுதலோர் அட்டமங்கலம் என்ப.’
- நவ. 50
‘எட்டுக் குலவுஅகவல் விருத்தமுறு தெய்வக் காப்பாம்
மீதட்ட மங்கலம்.’
- சித. பாட்.
34
‘அட்ட மங்கலம் எட்டு மனவிருத்தம்
கவிதோறும் தெய்வம் காப்பஎன்று உரைப்பது.’
- தொ. வி. 274
‘விரும்பும் எட்டுமன விருத்தந் தோறும்
தெய்வம் காப்பாய்ச் சிறந்து சுபகரத்து
அந்தாதித்து இயம்பல் அட்டமங் கலமே.’
-
பி. ம. 22
‘அரிய கடவுளர் மீது பாடி அக்கடவுளே
அநுதினம் காக்க எனவும்
தாவில் ஆசிரிய விருத்தம் எட்டுஅந்தாதி சாற்று
அட்ட மங்கலம் தான்.’
- பி. தீ. 9
‘கடவுளைப் பாடிஅக் கடவுள் தானே
காக்கஎன்று அகவல் விருத்தம் இருநான்கு
அந்தாதித்து அறைகுவது அட்டமங் கலமே.’
- மு. வீ. யா. ஒ. 86
83
|