பாட்டியல்
- நூற்பா எண் 86,87 |
219 |
‘நேரிசை வெண்பா வாலே நிருபன்
சின்னமாம் தசாங்கத் தினைச்சிறப் பித்து
விரித்துஐம் பதுதொண் ணூறுஎழு பதுமுப்
பதுநூறு எனும்எண் படஎடுத் துரைப்பது
சின்னப் பூஎனச் செப்பினர் புலவர்.’
- மு. வீ. யா. ஒ. 164
86
சதகம்
847.
விழையும் ஒருபொருள் மேல்ஒரு நூறு
தழைய உரைத்தல் சதகம் என்ப.
இது
சதகம் ஆமாறு கூறுகின்றது.
இ - ள்: கற்று வல்லோரால் விரும்பும் அகப்பொருள்
ஒன்றன் மேலாதல்
புறப்பொருள் ஒன்றன் மேலாதல்
கற்பித்து நூறு கவி பாடுதலே சதகமாம்.
(87)
ஒத்த
நூற்பாக்கள்
சயமாம் மிகுபொருள் ஒன்றின் பாநூறு சதகமதே.’
|
- |
நவ. 10 |
‘கருது பொருள்இடம் காலம் தொழிலின்
நூறான் வெண்பாக் கலித்துறையின் ஆதல்
மன்னும் அவ்வெண்ணால் சதகம் என்று
இயலும் செய்யுட்கு ஏற்ற பெயரே.’
|
- |
பி. ம. 34 |
‘அகப்பொருள் ஒன்றன்மேல் ஆதல்
புறப்பொருள்
ஒன்றன்மேல் ஆதல் கற்பித்து ஒருநூறு
செய்யுள் உரைப்பது சதகமாம் என்ப.’
|
- |
மு. வீ. யா. ஒ. 156; தொ. வி. 283 உரை. |
87
|