பாட்டியல்
- நூற்பா எண் 88,89 |
221 |
‘பாட்டுடைத் தலைவன் ஊரும் பெயரும்
பத்துமுதல் ஆயிரம் அளவும் பாடி
எண்ணால் பெயர்பெறல் எண்செய்யுள் ஆகும்.’
- மு. வீ. யா. ஒ. 119; தொ. வி. 283 உரை
88
ஐந்திணைச் செய்யுள்
849. உரிப்பொருள் தோன்ற ஓரைந் திணையும்
தெரிப்பது ஐந்திணைச் செய்யுள் ஆகும்.
இஃது ஐந்திணைச் செய்யுள் இலக்கணம் கூறுகின்றது.
இ - ள்: புணர்தல் முதலிய ஐந்து திணையினையும் தெரித்துக்
கூறுதல் ஐந்திணைச் செய்யுளாம் என்றவாறு.
(89)
ஒத்த நூற்பாக்கள்
‘கூடல் முதல் ஐந்து உரிப்பொருளும் விளங்கக் குறிஞ்சியோடு
ஐந்திணையினைக் கூறுப ஐந்திணைச் செய்யுள் என்பர்.’
- நவ. 3
‘வருபுணர்தல் முதல் ஐந்துஉரிப்பொருள் பிரகாசிக்க
வரைஆதியை ஐந்திணை
வகுத்துச் சிறப்பித்தல் ஐந்திணைச் செய்யுள்வெள்ளை
வஞ்சி கலிவணம் அகவலே.’
- பி. தீ. 8
‘புணர்தல் முதலிய ஐந்துஉரிப் பொருளும்
அணிபெறக் குறிஞ்சி முதலிய ஐந்திணை
யினையும் இயம்புவது ஐந்திணைப் பாவே.’
- மு. வீ. யா. ஒ. 82
- தொ. வி. 283 உரை.
89
|