பாட்டியல் - நூற்பா எண் 92,93

225


 

 

     ‘மன்னும் அம்பகம் ஆகும் உறுப்பை

     ஆசிரிய விருத்தம் கலித்துறை ஒன்றின்

     ஏற்க வருணித்து ஈரைந்து சொல்வது

     அப்பெயர்ப் பத்துஎன்று அறைந்தனர் புலவர்.’

                                           - பி. ம. 15

 

     ‘நாட்டந்தனை தசச்செய்யுளால் கூறல்

          நயனப்பத்து எனப் புகலுவார்.’             

- பி. தீ. 23

 

     ‘நனிமுலையைத் தசச் செய்யுளால் கூறுவது

          நற்பயோதரப்பத்து இதே.’            

- பி. தீ. 23

 

     ‘பார்வையைப் பத்துப் பாட்டால் உரைப்பது

     நயனப் பத்தென நவிலப் படுமே.’

 

     ‘பருமுலைப் பத்துப் பாவால் அறைவது

     பயோதரப் பத்தெனப் பகரப் படுமே.’

                 - மு. வீ. யா. ஒ. 143, 144; தொ. வி. 283 உரை.

                                                     92

 

ஒன்பான் வகை விருத்தம்

 

853. வில்வாள் வேல்செங் கோல்மத மாபரி

    நாடுஊர் கொடையை நயந்த பப்பத்து

    விருத்தம் ஒன்பதும் விளங்கும்அப் பெயரான்.

 

இது வில் முதலிய ஒன்பதுவகை விருத்தம் ஆமாறு கூறுகின்றது.

 

     இ - ள்: வில்லினையும் வாளினையும் வேலினையும் செங்கோலினையும்
யானையினையும் குதிரையினையும் நாட்டினையும் ஊரினையும்
கொடையினையும் பப்பத்தாகக் கூறும் ஒன்பதுவகை விருத்தங்களும்
அவ்வப்பெயரான் விளங்கும் என்றவாறு.

29-30