228
228

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


     ‘தொடர்நிலை என்பது தமிழ்இயற் பேரே

     கடவுள் வணக்கம் நாடுஊர் காவலர்

     மாப்பு ணர்ச்சிகொள் மகளிர் முடிசூடல்

     கற்றல் படைகுடி திறல்செலல் தூது

     செற்றோர் தருதிறை கற்றோர்க்கு உதவல்

     கடல்புனல் வரவு கார்ப்பொழில் உண்டாட்டு

     தானம் மகப் பெறுதல் காலை மாலை என

     இருகதிர்க் கோளே அறுவகைக் காலமும்

     இயைந்துடன் நுகர்தல் எழில்தரு வீடுஎனப்

     பகர்ந்தவும் பிறவும் தொடர்நிலைப் பண்பே.’

                                      - பன். பாட். 351

 

     ‘உரையிடை மிடைந்த பாட்டுடைச் செய்யுள்

     விரவிய மரபின் விளம்பிய நெறித்தே.’           

                                                 ’’   

 

     ‘சருக்க நடையினும் இலம்பக முடிவினும்

     விருத்த நடையது வெற்றிசை யான.’                                         ’’

 

     ‘வெண்பா நடையினும் பண்புற வருமே.’

 

     ‘விதப்புக் கிளவி வேண்டியது விளைக்கும்.’            

                                                ’’

 

     ‘புகரில் வணக்கம் பொருப்பறமே ஆதி

     பகர்தல் கடல்கோள் பருவம் - நிகரில்

     தலைவனைக் கூறல் தபனன்இந்து தோற்றம்

     நிலைமணந்தோர் போரின் செயல்.’    

 - வெ. பா. செ. 40

 

     ‘செயலார் முடிசூடல் சீர்ப்புதல்வர்ப் பேறோடு

     அயலார் பொழில்புனல்புக்கு ஆடல் - இயலும்ஊண்

     மந்திரம்தூ தாடல் வரும்இகல் விக்கிரமம்

     சந்துசெல வும்பிறவும் சார்ந்து.’                      

 ’’    41

     ‘சார்சுவையே பாவம் விளக்கி இனத்தொடுபாக்

     கூருரையே பாடையே கொண்டிலம்பம் - நேர்சருக்கம்

     நீப்பில் பரிச்சேதம் நேர்ந்துவரு மேற்பெருங்

     காப்பியமாம் என்று கருது.’                   

  ’’    42