பாட்டியல்
- நூற்பா எண்
94 |
229 |
‘கருதுசில குன்றினும்அக் காப்பியமாம் என்பர்
பெரிதறமே ஆதி பிழைத்து - வருவதுதான்
காப்பிய மாகும் குலவரவு காரிகை
யாப்பிற் புராணமே யாம்.’
- வெ. பா. செ. 43
‘முன்னம் வணக்கம் அறம்முதல் நான்கின் திறமுரைத்தல்
தன்னிக ரில்லாத் தலைவனைக் கூறல் தசாங்கங்களை
வன்னித்தல் வாழ்த்தல் பருவம் இருசுடர்த் தோற்றம்வளம்
இன்னன கூறல் பெருங்காப் பியத்துக்கு இலக்கணமே.’
- நவ. 60
‘பொன்முடி சூடல் பொழில்விளை யாடல் புனலாடுதல்
நன்மணம் செய்தல் நறவூண் களிப்புக் கலவிதுனி
மன்மகப் பேறொடு மந்திரம் தூதுசெல விகலாடு
இன்ன வகைச்சந்தி கூட்டுதல் கூறல்இக் காப்பியமே.’
- 61
‘விருப்பம் தருஞ்சுவை பாவம்விளக்கி மிகுபாக்களால்
உரைத்த இனத்தால் உரையோடு உடன்படல் மேற்பரந்து
சருக்கம் இலம்பகம் பரிச்சேதம்என்று தனதுபெயர்
தெரித்து வருவது செப்பிய காப்பியம் தேமொழியே.’
- 62
‘நெறியறிந் திவ்வாறு இயற்றியவாறு நிலைநிற்றலும்
பெறுபெய ரென்பது பேசும்அறம்முதல் நான்கினும்தாம்
குறைய வரினும்முன் கூறிய காப்பியம் கோகனகச்
செறிமலர் அல்லிப் பொகுட்டினில் வாழும் திருந்திழையே.’
- 63
‘பாடுநெறி வணக்கம் வாழ்த்து ஒன்று நாலாய்ப்
பகர்பொருள்முன் வரஇறைவன் வெற்புவேலை
நாடுநகர் பொருள்பருவம் இருசுடர் பெண்வேட்டல்
நண்ணல்முடி பொழில்புனலாடல் கள்ளுண்டல்
கூடுமகிழ்வு ஊடல்துனி புதல்வர்ப்பேறு
கூறிடு மந்திரம் தூதுசெலல் போர்வென்றி
|