240
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம்
|
அரிவை தெரிவை பேரிளம் பெண்ணெனப்
பாற்படு மகளிர் பருவக் காதல்
நோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே.’
- பன். பாட்.
220
‘பேதைக்கு யாண்டே ஐந்துமுதல் எட்டே.’
’’ 221
‘பெதும்பைக்கு யாண்டே ஒன்பதும் பத்தும்.’
’’
222
‘மங்கைக்கு யாண்டே பதினொன்று முதலாத்
திரண்ட பதினா லளவும் சாற்றும்.’
’’
223
‘மடந்தைக்கு யாண்டே பதினைந்து முதலாத்
திடம்படும் ஒன்பதிற் றிரட்டி செப்பும்.’
’’
224
‘அரிவைக்கு யாண்டே அறுநான்கு என்ப.’
’’ 225
‘தெரிவைக்கு யாண்டே இருபத் தொன்பது.’
’’
226
‘ஈரைந்து இருநான்கு இரட்டி கொண்டது (36)
பேரிளம் பெண்டுக்கு இயல்புஎன
மொழிப.’
’’ 227
‘காட்டிய முறையே நாட்டிய ஆண்பாற்கு
எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து
சொல்லிய தொன்னெறிப் புலவரும் உளரே.’
’’ 228
‘பாலன் யாண்டே ஏழ்என
மொழிப.’
’’ 229
‘மீளி யாண்டே பத்துஇயை காறும்.’
’’
230
‘மறவோன் யாண்டே பதினான்
காகும்.’
’’ 231
‘திறலோன் யாண்டே பதினைந்து
ஆகும்.’
’’
232
‘பதினாறு எல்லை காளைக்கு யாண்டே.’
’’ 233
‘அத்திறம் இறந்த முப்பதின் காறும்
விடலைக்கு ஆகும்; மிகினே முதுமகன்.’
’’
234
‘நீடிய நாற்பத் தெட்டின் அளவும்
ஆடவர்க்கு உலாப்புறம் உரித்துஎன
மொழிப.’
’’
235
|