பாட்டியல் - நூற்பா எண் 105, 106

243


 

ஒத்த நூற்பாக்கள்

 

    ‘சொற்சீரடிக் கட்டுரைப்பாக் குலமுறைக் கீர்த்தி புகறல்

     மெய்க்கீர்த்தி மாலை.’                

 - நவ. 7

 

     ‘மருவுசொற் சீர்அடி எனும் கட்டுரைச் செய்யுள்

          மரபுவழியில் செய்திடும்

     மற்புயன் கீர்த்தியை விரித்தெடுத் தோதல்

          வளரும்மெய்க் கீர்த்தி மாலை.’              

- பி. தீ. 18

 

     ‘சொற்சீர் அடியெனும் கட்டுரைத் தொடர்பால்

     குலமுறை ஆற்றிய கீர்த்தியைக் கூறல்

     மெய்க்கீர்த்தி மாலையாம் விளம்புங் காலே.’

                            -மு. வீ. யா. ஒ. 99; தொ. வி. 283 உரை.

105

புகழ்ச்சி மாலை, நாமமாலை

 

866. மயக்க அடிபெறும் வஞ்சிப் பாவால்

    வியத்தகு நல்லார் விழுச்சீர் உரைத்தல்

    புகழ்ச்சி மாலை; புருடர்க்கு உரைப்பின்

    நாம மாலை யாம்என நவில்வர்.

 

இது புகழ்ச்சிமாலையும் நாமமாலையும் ஆமாறு கூறுகின்றது.

 

இ - ள்: அகவல்அடியும் கலிஅடியும் வந்து மயங்கிய வஞ்சிப்பாவால்
வியக்கத்தகும் நல்லாரது விழுமிய சிறப்பைக் கூறுதல் புகழ்ச்சி மாலையாம்; அவ்வஞ்சிப் பாவால் ஆண் மகனைப் புகழ்ந்து பாடுதல் நாம மாலையாம்
என்று கூறுவர் புலவர் என்றவாறு.

(106)

ஒத்த நூற்பாக்கள்

 

    ‘வெள்ளடி இயலான் புணர்ப்போன் குறிப்பின்

     தள்ளா இயலது புகழ்ச்சி மாலை.’          

    - பன். பாட். 287