244
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
‘அதுவே, செங்கலை வண்ணப் பாவும் இயங்கும்.’
- பன். பாட். 286
‘ஆடவர் திறத்து வஞ்சி யின்னெறி
நாடிய பாதம் மயங்க வைப்பின்
நாம மாலை; மற்றது மடந்தையர்க்கு
ஆம்எனின் புகழ்ச்சி மாலை ஆகும்.’
’’ 285
‘மைந்தர்க் காயின் வஞ்சிப் பல்வகை
நேர்ந்தஅடி மயக்கம் நாம மாலை.’
’’ 284
‘புரிந்த மயக்கஅடி வஞ்சியால் பொய்தீர்
திருந்திழையார் சீர்பேர் சிறக்கத் - தெரிந்துரைத்தால்
மன்னும் புகழ்ச்சிநன் மாலையாம் மைந்தர்க்காம்
பின்நாம மாலைப்பேர் பெற்று.’
- வெண். பாட். செ. 35
‘பாதம் பலமயங்கும் வஞ்சி ஆடவரைப் பரவி
ஓதுமது நாமமாலை; உரைத்த அச்செய்யுளினான்
மாதரை ஏத்தின் புகழ்ச்சி நன்மாலை.’
- நவ. 47
‘வஞ்சி, பேசுகுணப் பேர்அடுக்கி மடவார்க்கு ஓதில்
பெரும்புகழ்ச்சி மாலை ; அப் படிஆண் பாற்கு
மாசகல உரைக்கில்அது நாமமாலை.’
- சித. பா. 36
‘குணப்பெயர் அடுக்கிக் கொம்பனை யார்க்கு
வஞ்சியின் அகமிக மகிழ உரைப்பது
பெருமகிழ்ச்சி மாலை; இப்படி ஆடவர்க்கு
நயந்து பாடுவது நாம மாலை.’
- பி. ம. 29
‘புகழ்ச்சி மாலையாம் பூங்குழ லாரை
இகழ்ச்சியில் குலம்இயை வஞ்சி பாடல்;
நாம மாலையாம் நம்பிகண் புகழ்தலே.’
- தொ. வி. 269
‘அகவலடியும் கலியின்அடி மயங்கிய வஞ்சி
ஆன அப்பாவினாலே
ஆண்மகனையே புகழ்ந்தே கருத்தளவினில்
ஆற்றுவது நாமமாலை; மகளிர் புகழ்ச்சிமாலை.’
- பி. தீ. 11
|