பாட்டியல் - நூற்பா எண் 106, 107 245

 

 

  அகவ லடிகலி யடியும் மயங்கிய

     வஞ்சியின் அரிவையர் மாண்பை உரைப்பது

     புகழ்ச்சி மாலையின் பொருளா கும்மே.’ 

- மு. வீ. யா. ஒ. 96

 

  ‘அகவ லடிகலி அடியும் மயங்கிய

     வஞ்சியால் புருடனை வாழ்த்திப் புகழ்வது

     நாம மாலையாம் நாடுங் காலே.’       

- மு. வீ. யா. ஒ. 92

                                                     106

 

தாரகை மாலை

 

867. வகுப்பால் கற்புடை மகளிர்க்கு உள்ள

    தகைத்திறம் கூறுதல் தாரகை மாலை.

 

இது தாரகைமாலை இலக்கணம் கூறுகின்றது.

 

     இ - ள்: வகுப்பினால் அருந்ததிக் கற்பின் மகளிர்க்கு உள்ள
இயற்கைக் குணங்களைக் கூறுதல் தாரகை மாலையாம்
என்றவாறு.           

 (107)

 

ஒத்த நூற்பாக்கள்

 

     ‘இரண்டு பொருள்புணர் இருபத் தெழுவகைச்

     சீரிய பாட்டே தாரகை மாலை.’             

- பன். பாட். 305

(இதன் கருத்து வேறாகும்)

 

     ‘ஓதுசந்தத் தால்உரைத்தல் தாரகை மாலை

     கோதிலாக் கற்பின் குலமகளை.’   

- வெண். பாட். செ. 33

 

     ‘வடமீன்மகள் இயற்கைக்கு உதவுமேல், தாரகைமாலை.’

                                                - நவ. 8

     ‘தாரகை இருபத் தேழையும் தகைபெற

     சொல்லணி வகுப்பில் தூசி அணிதக

     வழுத்துதல் தாரகை மாலை என்ப.’            

- பி. ம. 36