248
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம்
|
யாகும்; போர்க்களத்தில் செல்லும் படைஎழுச்சியைக் கூறின் வரலாற்று வஞ்சியாம்; செருக்களத்தினைக்
கூறின் செருக்களவஞ்சி என்னும் பெயர் பெறும்; ஏனைப் புறத்திணைக்கண் துறுத்திக் கூறும் துறைப்
பொருளை விரித்துக்கூறின் அத்துறைப்பெயர் பெறும் என்றவாறு.
(109)
ஒத்த நூற்பாக்கள்
‘படைத்திறம் சொல்லின் பகர்தானை, வஞ்சி
எடுத்துமேல் சேறல் இயம்பின், - அடுத்தமைந்த
வெற்றிஉரை வாகையாம், வேந்தன்பா ஒன்றினால்
உற்றுரைத்து மாலைப்பேர் ஓது.’
- வெண். பாட். செ. 31
‘தூசிப்படை ஆசிரிய
விதிதவறாத் தானைமாலை என்றாகும்.’
- நவ. 8
‘குலமுறை கீர்த்தி பிறப்பு மேம்பாட்டுச் சிறப்பைச்
சொலல் வரலாற்று வஞ்சி.’
- நவ. 12
‘நிரைகவர் மீட்டல் செலல்ஊன்றல் காவளை நேர்தல் வென்றி
மருவிய வெட்சி கரந்தையும் வஞ்சியும் காஞ்சி நொச்சி
உரைஉழிஞை தும்பை வாகையும் அஃதவை மாலை என்பர்;
செருகு பூவேய்தல் அகவல் எண்மூன்றும் முதல் அடைவே.’
- நவ. 11
‘அடுமத யானையைப் படுத்திப் பகையானை எதிர்த்து
இடில் மற்றுஅவ் வஞ்சி மால்வர வாதோரண மஞ்சரியாம்.’
- நவ. 13
எப்பொருளும்,
நீதியினால் சொல்லின் அப்பெயரால் வஞ்சி நேர்ந்தனவே.’
- நவ. 47
‘செருக்கள வஞ்சியாம் செருமுகத் தாயவை
சுருக்கிய வஞ்சியால் தொடுத்துப் பாடலே.’
- தொ. வி. 270
|