252

252                       

 இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

சேர்த்த வர்க்கும் வீரச் சிறப்பை

வஞ்சியிற் பாடுவது அதுவா தோரண

மஞ்சரி எனப்பெயர் வைக்கப் படுமே.’

                 - மு. வீ. யா. ஒ. 118; தொ. வி. 283. உரை

                                                109

 

குழமகன்

 

870. கலிவெண் பாவால் கையினில் கண்ட

    குழமக னைச்சொலின் குழமகன் ஆகும்.

 

இது குழமகன் ஆமாறு கூறுகின்றது.

 

     இ - ள்: கலிவெண்பாவினான் மங்கையர் தம்கையில் கண்ட இளமைத்தன்மை உடைய குழமகனைப் புகழ்ந்து பாடின் குழமகன் ஆகும்
என்றவாறு.                       

110

 

ஒத்த நூற்பாக்கள்

 

  ‘குழமகன் மேவில்அவ்

   ஒண்பாக் குழமகனாம் உற்று.’                           

 - வெண். பாட். செ. 27

 

  ‘ஒண்தொடியார்,

   மருமலர்க் கையில் குழமகன் மேல்வைத்த மன்விருத்தம்

   தருகலி வெண்பாக் குழமகனாம் என்று சாற்றுவரே.’

                                               - நவ. 44

   உயர்பெண்கள் தம் கையில்கண்ட இளமைத்தன்மை

   உடைய குழமகனைப் புகழ்ந்து

  ஓதல் குழமகன் ஆகும்.’                                          - பி. தீ. 26

  ‘கலிவெண் பாவால் காரிகை யார்கரம்

  கண்ட இளமைத் தன்மையை உடைய

  குழமகன் தன்னைப் புகழ்ந்து கூறுவது

  குழமகன் ஆம்எனக் குறிக்கப் படுமே.’

                   - மு. வீ. யா. ஒ. 153;  தொ. வி. 283. உரை