254 |
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் |
‘உறுப்பமைந்த,
பாதாதி கேசமும் கேசாதி பாதமுமா
ஓதும் கலிவெண்பா ஒன்று.’
- வெண். பாட். செ. 29
‘கடிதலில்லாக் கலிவெண்பாப் பகரும் அவயவங்கள்
முடிவது கேசமும், கேசம்முதல் அடிஈறும் வந்தால்
படிதிகழ் பாதாதி கேசமும் கேசாதி பாதமுமாம்
வடுவில வெண்பா விருத்தம் பலஅங்கமாலை என்னே.’
- நவ. 42
‘அகங்கால் உகிர்விரல் மீக்கால்பரடு அங்கணை முழந்தாள்
மிகுங்கால் துடைஇடை அல்குல் கொப்பூழ்வயின் வெம்முலையாய்
நகம்சார்விரல் அங்கைமுன்கை தோள்கண்டம் முகம்நகைவாய்
தரும்காது இதழ்மூக்கு கண்புருவம் நெற்றி தாழ்குழலே.’
- நவ. 43
‘கலிவெண் பாவால்
பாதாதி கேசம்கே சாதி பாதம்
மகிழஉரைத் திடிலந்தப் பேராம்.’
- சித. பாட். 35
‘பாதாதி கேசம் கேசாதி பாதம்
எண்ணான்கு உறுப்பும் ஏற்கவரு ணித்துக்
கலிவெண் பாவால் கட்டுரை செய்வது
அவ்வப் பெயரின.’
- பி. ம. 26
‘உற்றஅடி முடிவரை கலிவெண் பாவினால்
ஓதல் பாதாதி கேசம்;
ஒளிரும்முடி அடிவரை கலியின் வெண்பாவால்
உரைத்தல் கேசாதி பாதம்.’
- பி. தீ. 24
‘கால்முதல் முடிவரை கலிவெண் பாவால்
பாடு வதுபா தாதி கேசம்
ஆகும் என்மனார் அறிந்திசி னோரே.’
- மு. வீ. யா. ஒ. 145
‘கலிவெண் பாவால் முடிமுதல் கால்வரை
கிளத்தல் கேசாதி பாதம்
ஆகும்.’
’’ 146
111
|