பாட்டியல் - நூற்பா எண் 112,119   

  257


 

       ‘பாய்ந்திடுமும் மதத்தானைத் தொழில்நேர் கொல்லும்

          படைக்களிற்றைக் கண்டரசன் பற்றிச் சேர்தல்.’

                                      - சிதம். பாட். 40

 

     ‘பொருமதக் களிற்றைப் பொருநர் கண்டு

     ஆடலில் சேர்த்தல் ஆனைத் தொழில்; இது

     ஆசிரியம் வஞ்சியில் அமைவ தாமே.’      

 - பி. ம. 39

                                                   112

 

ஆற்றுப்படை

 

873. அரசர் பாவால் ஆற்றுப் படைமேல்

    உரைசெய் தவையென்று ஓர்ந்தனர் கொளலே.

 

இஃது ஆற்றுப்படை இலக்கணம் மாட்டேற்றான் உணர்த்துகின்றது.

 

     இ - ள்: ஆற்றுப்படையாவது, மேலே புறத்திணையின் கண்,

 

     ‘கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

     ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்

     பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்

     சென்றுபயன் எதிரத் தெரித்தஆற் றுப்படை’

                                           - இ. வி. பு. 19

 

எனக்கூறிய பொருள்மேல் ஆசிரியப்பாவால் சொல்லைச் சேர்த்துப் பாடப்படுவது என்று ஆராய்ந்து கொள்க என்றவாறு. ஓர்ந்து கொள்க என முற்றெச்சமாக்கிக் கொள்க.                   

 (113)

 

ஒத்த நூற்பாக்கள்

 

     ‘புரவலன் பரிசில் கொண்டு மீண்ட

     இரவலன் வெயில்தெறும் இருங்கா னத்திடை

     வறுமை யுடன்வரூஉம் புலவர் பாணர்