258 |
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் |
பொருநர் விறலியர் கூத்தர்க் கண்டுஅப்
புரவலன் நாடுஊர் பெயர்கொடை பராஅய்
ஆங்குநீர் செல்கஎன விடுப்பதுஆற் றுப்படை.’
- பன். பாட். 320
‘ஓங்கிய அதுதான் அகவலின் வருமே.’
’’ 321
‘புலவராற் றுப்படை புத்தேட்கும் உரித்தே.’
’’ 322
‘ஒன்றாம் அகவலா ஒண்புலவர் யாழ்ப்பாணர்
குன்றாத சீர்ப்பொருநர் கூத்தரே - என்றிவரை
ஆங்கொருவன் ஆற்றுப் படுத்த பரிசறைந்தால்
பாங்காய ஆற்றுப் படை.’
- வெண். பாட். செ. 30
‘புலவன்,
நிறைந்த பொருநரைப் பாணரைக் கூத்தரை நீள்நிதியம்
பெறும்படி ஆற்றுப் படுப்பன ஆசிரி யம்பெறுமே.’
- நவ. 51
‘புகழ்அகவ லாற்புலவர் பாணர் கூத்தர்
பொருநர்முத லவரையாற்று எதிர்ப்பா டாகப்
பகருமது ஆற்றுப் படையாம்.’
- சித. பாட். 35
‘ஆற்றுப்படை என்ப ஆற்றெதிர்ப் படுத்திய
புலவர் பாணர் பொருநர் கூத்தர்
பலபுகழ் அகவற் பாவொடு பாடலே.’
- தொ. வி. 266
‘விறலியர் பாணர் கூத்தர் பொருநர் என்று
ஓது நால்வருள் ஒருவரை அகவலால்
அங்கொரு தன்மை ஆற்றுப் படுத்துப்
பகர்வது ஆற்றுப் படையென மொழிப.’
- பி. ம. 25
‘உயர்விறலி பாணர் கூத்தர்
பலபொருநர் இந்நால் வரில்ஒருவர் பரிசுஉதவு
பரிசினுக்கு ஏகு வாரைப்
பரிசுஉற்று வருவோர்கள் ஆற்றினிடை யேகண்டு
பரிசு உதவு தலைவன் கொடைநிலை
கீர்த்தி கொற்றமும் சாற்றல் ஆற்றுப்படை.’
- பி. தீ. 21
|