260

260

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

   ‘இருதிணை யுடன்அமை இயலை உரைத்துத்

     தூதுசொல விடுவது தூது; இது கலிவெண்

     பாவினால் விரித்துப் பகருவது மரபே.’       

- பி. ம. 33

                                                  114

 

    ‘ஆணும் பெண்ணும் அவரவர் காதல்

     பாணன் முதலிய உயர்திணை யோடும்

     கிள்ளை முதலிய அஃறிணை யோடும்

     சொல்லிய தூது போய்வா என்னக்

     கலிவெண் பாவால் அறைவது தூது.’

                   - மு. வீ. யா. ஒ. 151; தொ. வி. 283. உரை

 

அகலக்கவிக்குச் சிறப்புவிதி

 

815. அகப்பொருள் கூறும் ஆசிரி யத்துள்

    புகப்பெறா வஞ்சி யடி,பொரு ளன்றி

    மிகக்கலி வாரா, மேவும் வஞ்சி

    தொகைப்பெறா, தனித்துச் சொல்லப் படுமே.

 

இது மேல் கூறப்பட்ட அகலக்கவிகளில் சிலவற்றிற்கு எய்தியதன்மேல் சிறப்புவிதி கூறுகின்றது.

 

     இ - ள்: அகப்பொருளைக் கூறும் ஆசிரியப்பாவினுள் வஞ்சியடி உறல்
ஆகா; அவ்வகப் பொருளினன்றி ஏனைய பொருள்மேல் பெரும்பான்மையும்
கலி வாரா; வஞ்சிப்பாத் தொகை பெற்று நிற்கப்பெறா, தனித்துச்

சொல்லப்படும் என்றவாறு.   

 (115)

 

ஒத்த நூற்பாக்கள்

 

     ‘நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

     பாடல் சான்ற புலனெறி வழக்கம்

     கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும்

     உரிய தாகும் என்மனார் புலவர்.’        

- தொ. பொ. 53