பாட்டியல் - நூற்பா எண் 117,118 

  263


 

வணிகர்க்கு உரிய பா என்றும் வஞ்சிப்பா சூத்திரர்க்கு உரிய பா என்றும்
பெயர் பெற்று நடக்கும் என்றவாறு.            

(117)

 

ஒத்த நூற்பாக்கள்

 

    ‘அந்தணர் சாதி ஆகிய வெள்ளை.’    

- பன். பாட். 162

 

     ‘காவலர் சாதி ஆகிய அகவல்.’           

 ’’    163

 

     ‘நெடுநிலைக் கலியே வணிகர் சாதி.’            

 ’’    164

 

     ‘எஞ்சிய வேளாண் சாதி வஞ்சி.’          

 ’’    165

 

     ‘வேறுமறை யோர்ஆதி நாற்சாதி வெள்ளைமுதல்

     கூறுநிலை முல்லை குறிஞ்சியே - மாறா

     மருதநிலம் நெய்தல்நிறம் வான்மையே செம்மை

     கருதரிய பொன்மையே கார்.’     

- வெண். பாட். பொ. 1

 

     ‘வேதியன் வேந்தன் வணிகன் வேளாளன் எனமுறையே

     ஓதுவார் வெண்பா அகவல் கலிவஞ்சி ஓதவற்றின்

     பேதமும் அவ்வகை யானே வரும்என்பர்.’        

 - நவ. 80

 

     ‘வெண்பா முதல்நாற் பாவும்அவ் வவற்றோடு

     ஒத்து நடைபெறும் ஒருமூன்று இனமும்

     மறையவர் முதல்நால் மரபின்வந் தோர்க்கு

     ஆம்மரபு என்ப அறிந்திசி னோரே.’            

 - பி. ம. 46

                                                     117

திணை உரிமை

 

878. முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்

    வெள்ளை முதற்பா வினுக்குரி யனவே.

 

இது நான்கு பாவிற்கும் திணை உரிமை கூறுகின்றது.

 

     இ - ள்: முல்லைத்திணைக்கு வெண்பாவும் குறிஞ்சித் திணைக்கு
ஆசிரியப்பாவும் மருதத்திணைக்குக் கலிப்பாவும் நெய்தல்திணைக்கு
வஞ்சிப்பாவும் உரியவாம் என்றவாறு.