270                      இலக
270

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

    ‘ஓட்டுமதி பொன்வெள்ளை ஒண்கதிரோன் சேயகவல்

    காட்டியமால் காரி கலிக்காகும் - ஈட்டும்

    புகர்பாம்பு வஞ்சிக்காம் பூவிரையோ டாடை

    பகர்நிறத்தால் கொள்கஅணி பாட்டு.’                        

 - வெ. பா. பொ. 3

 

   ‘சாதி நிலம்நிறம் தகுநாள் இராசிகோள்

   ஓதினர் ஆறும் ஒவ்வொரு பாவிற்கே;

   வெண்பா முதற்குலம் முல்லை வெண்மை

   கார்த்திகை முதல்ஏழும் கடகம் விருச்சிகம்

   மயிலை(மீன்) மதிகுரு வழங்கும் இயல்பே.’                       

 - தொ. வி. 295

 

   ‘அகவற்கு அரசர் அருங்குலம் குறிஞ்சி

   குருதி மகம்முதல் கொண்டெழு மேடம்

   அரிதனுச் செவ்வாய் ஆதவன் இயல்பே.’ 
                           

 ’’     296

 

   ‘கலிக்கே வணிகம் கழனி பொன்மை

   குலாம்பனை முதல்ஆறும் குடமொடு மிதுனம்

   துலாம்புதன் சனிஎனத் தொக்குஇவை ஏற்கும்.’                      

 ’’     297

 

   ‘வஞ்சிக்கு ஈறது இயல்வருணம் நெய்தல்

   அஞ்சனம் அவிட்டம் ஆதி ஏழும்

   விடைபெண் கலைபுகர் விடத்தரவு இயலுமே.’               

  ’’    298

 

  ‘வெண்பா முதல்நாற் பாவும்அவ் வவற்றோடு

   ஒத்து நடைபெறும் ஒருமூன்று இனமும்

   மறையவர் முதல்நால் மரபின்வந் தோர்க்கு

   ஆம்மரபு என்ப அறிந்திசி னோரே.’

- பி. ம. 46 

  ‘முல்லை குறிஞ்சி மூசு மருதம்

  நெய்தல் என்ன எய்தும்நா னிலமும்

  திகழும் வெண்மையும் செம்மையும் பொன்மையும்

  கருமையு மாகக் கருதுநா னிறமும்

  அறுமீன் கொடுநுகம் அநுடம் அவிட்டம்

  என்னும் நான்குமென்று இன்னவை முறையே

  வெண்பா முதலா மேவுநாற் பாவும்

  கொள்ளும் மரபாம் குறிக்குங் காலே.’   

                            - பி. ம. 47