272
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம்
|
‘வஞ்சிநிறம் கறுப்பு; வாருதி நெய்தல்
நிலன்; கடைக் குலம்;அவிட் டம்முதல் ஏழும்
நாள்; இட பம்கனி மகரம் இராசி;
வெள்ளி இராகு கிரகம் என்ப.’
- மு. வீ. யா. ஒ. 54
124
கவிக்கு
ஒரு சிறப்பு
885. தலைவன் பேர்ஊர் சாதித்து எதுகையின்
நிலையுற அநுவில் நிறுத்தல் சிறப்பே.
இது
மேற்கூறிப்போந்த கவிக்கு ஒரு சிறப்புக் கூறுகின்றது.
இ - ள்; பாட்டுடைத் தலைவன் இயற்பெயரையும் ஊர்ப்பெயரையும்
உகந்து எதுகையின் நிலையுறல் அநு எழுத்தின் நிலையுறலாகப்
பாடுதல்
சிறப்பு என்றவாறு.
(125)
விளக்கம்
தலைவன் பெயர் முதற்பாட்டிலேயே எதுகையில் நிலையுறல்
வேண்டுவதின்று; நூலுள் யாண்டேனும் இருப்பின் அமையும்
‘நச்சு நாகத்தின் ஆரழல் சீற்றத்தன்
அச்ச முற்றடைந் தார்க்கமிர்த தன்னவன்
கச்சு லாமுலை யார்க்கணங் காகிய
சச்சந் தன்னெனும் தாமரைச் செங்கணான்.’
- சிந்தா.
‘மசரதம் அனையவர் வரமும் வாழ்வுமோர்
நிசரதக் கணைகளால் நீறு செய்யயாம்
கசரதத் துரகமா கடலன் காவலன்
தசரதன் மதலையாய் வருதும் தாரணி.’
- இராமா.
‘கராமலை யத்தளர் கைக்கிரி எய்த்தே
அராவணை யிற்றுயில் வோயென அந்நாள்
விராவி அளித்தருள் மெய்பொரு ளுக்கே.
இராமன் எனப்பெயர் இட்டனர் அன்றே.’
- இராமா.
போல்வன
காண்க.
|