272                      இலக
272  

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

     ‘வஞ்சிநிறம் கறுப்பு; வாருதி நெய்தல்

     நிலன்; கடைக் குலம்;அவிட் டம்முதல் ஏழும்

     நாள்; இட பம்கனி மகரம் இராசி;

     வெள்ளி இராகு கிரகம் என்ப.’                

           - மு. வீ. யா. ஒ. 54

                                                  124

 

கவிக்கு ஒரு சிறப்பு

 

885. தலைவன் பேர்ஊர் சாதித்து எதுகையின்

    நிலையுற அநுவில் நிறுத்தல் சிறப்பே.

 

இது மேற்கூறிப்போந்த கவிக்கு ஒரு சிறப்புக் கூறுகின்றது.

 

     இ - ள்; பாட்டுடைத் தலைவன் இயற்பெயரையும் ஊர்ப்பெயரையும்
 உகந்து எதுகையின் நிலையுறல் அநு எழுத்தின் நிலையுறலாகப் பாடுதல்
 சிறப்பு என்றவாறு.                                                                    (125)

 

விளக்கம்

 

     தலைவன் பெயர் முதற்பாட்டிலேயே எதுகையில் நிலையுறல்
 வேண்டுவதின்று; நூலுள் யாண்டேனும் இருப்பின் அமையும்

 

     ‘நச்சு நாகத்தின் ஆரழல் சீற்றத்தன்

     அச்ச முற்றடைந் தார்க்கமிர்த தன்னவன்

     கச்சு லாமுலை யார்க்கணங் காகிய

     சச்சந் தன்னெனும் தாமரைச் செங்கணான்.’  

- சிந்தா.

 

     ‘மசரதம் அனையவர் வரமும் வாழ்வுமோர்

     நிசரதக் கணைகளால் நீறு செய்யயாம்

     கசரதத் துரகமா கடலன் காவலன்

     தசரதன் மதலையாய் வருதும் தாரணி.’  
 

 - இராமா.

     ‘கராமலை யத்தளர் கைக்கிரி எய்த்தே

     அராவணை யிற்றுயில் வோயென அந்நாள்

     விராவி அளித்தருள் மெய்பொரு ளுக்கே.

     இராமன் எனப்பெயர் இட்டனர் அன்றே.’                          

- இராமா.

போல்வன காண்க.