பாட்டியல்
- நூற்பா எண் 125, 126 |
273 |
ஒத்த
நூற்பாக்கள்
‘பாட்டுடையோன் ஊர்ப்பேர் இயற்பேர் படஎதுகை
நாட்டிடினும் அப்பேர் நவிலடியின் - காட்டுமுதல்
சேர்ந்த அநுவாகச் சீர்முன் இயற்றிடினும்
வாய்சிறப் பென்கை வழக்கு.’
- வெண். பாட். பொ. 4
‘சாற்றும் தலைவன் இயற்பெயர் ஊர்க்குத் தகஎதுகை
தோற்றினும் அப்பெயர் சொல்லும்அப் பாதங்கள்
துன்றும்அச்சீர்
ஏற்ற எழுத்து வரினும் இயைந்தது இயற்பெயர்க்கே
ஆற்றும்பொருத்தம் அனைத்தும் பொருந்தினும்
ஆம்சிறப்பே.’
- நவ. 81
125
செய்யுள்
வழுக்கள்
886.
தெளிந்த வழக்கொடு சிறந்த பொருள்படூஉம்
இன்பம் ஒரீஇவட எழுத்தே மிக்கு
முதிர்சொல் புணர்க்காது எதிர்சொல் புணர்த்து
மால்உறச் செய்தல் வழுவாம் என்பர்.
இது
மேலனவற்றிற்கெல்லாம் வழுஇவை என்கின்றது.
இ - ள்: பலரானும் உடன்பட்ட வழக்கோடு நூற்பயன்
பயக்கும்
இன்பத்தினைவிட்டு மறுதலையால் புணர்த்தலும்,
வடவெழுத்தே மிகப்
புணர்த்தலும், பழையோர் கூறிய இலக்கணச் சொற்களை விட்டுக் காலத்தால்
கூறும்
வழூஉச்சொல் புணர்த்தலும், வினாவின்றி மயங்கக்
கூறுதலும்
செய்யுட்கு வழு என்று கூறுவர் புலவர் என்றவாறு.
என்னை?
|