பாட்டியல் - நூற்பா எண் 125, 126

273


  

ஒத்த நூற்பாக்கள்

 

     ‘பாட்டுடையோன் ஊர்ப்பேர் இயற்பேர் படஎதுகை

     நாட்டிடினும் அப்பேர் நவிலடியின் - காட்டுமுதல்

     சேர்ந்த அநுவாகச் சீர்முன் இயற்றிடினும்

     வாய்சிறப் பென்கை வழக்கு.’                          

 - வெண். பாட். பொ. 4

 

    ‘சாற்றும் தலைவன் இயற்பெயர் ஊர்க்குத் தகஎதுகை

     தோற்றினும் அப்பெயர் சொல்லும்அப் பாதங்கள்

                                       துன்றும்அச்சீர்

     ஏற்ற எழுத்து வரினும் இயைந்தது இயற்பெயர்க்கே

     ஆற்றும்பொருத்தம் அனைத்தும் பொருந்தினும் ஆம்சிறப்பே.’

                                             - நவ. 81

                                                  125

 

செய்யுள் வழுக்கள்

 

886. தெளிந்த வழக்கொடு சிறந்த பொருள்படூஉம்

    இன்பம் ஒரீஇவட எழுத்தே மிக்கு

    முதிர்சொல் புணர்க்காது எதிர்சொல் புணர்த்து

    மால்உறச் செய்தல் வழுவாம் என்பர்.

 

இது மேலனவற்றிற்கெல்லாம் வழுஇவை என்கின்றது.

 

     இ - ள்: பலரானும் உடன்பட்ட வழக்கோடு நூற்பயன் பயக்கும்
இன்பத்தினைவிட்டு மறுதலையால் புணர்த்தலும், வடவெழுத்தே மிகப்
புணர்த்தலும், பழையோர் கூறிய இலக்கணச் சொற்களை விட்டுக் காலத்தால்
கூறும் வழூஉச்சொல் புணர்த்தலும், வினாவின்றி மயங்கக் கூறுதலும்
செய்யுட்கு வழு என்று கூறுவர் புலவர் என்றவாறு.

என்னை?