பாட்டியல் - நூற்பா எண் 128  

 287


 

அவை அடக்கியல்

 

888. அவையடக் கியலே அரில்தபத் தெரியின்

    வல்லோன் கூறினும் வகுத்தனர் கொண்மின்என்று

    எல்லா மாந்தர்க்கும் வழிமொழிந் தன்றே.

 

இது செய்யுள் செய்யும் புலவர்க்கு வேண்டுவதாயதோர் ஒழிபு அவையடக்கம்
கூறுகின்றது.

 

     இ - ள்: அவையடக்கம் கூறும் இலக்கணத்தைக் குற்றமற ஆராய்ந்து
கூறின் கற்றுவல்லோன் நாற்பொருளையும் அறிந்து கூறுமாயினும்
அவையினுள்ளார்க்குத் தான் குறைபாடுடையனாக நீயிர் குற்றம் களைந்து
ஆக்கிக்கொள்வீர் என்று வழிபடு சொல்லால் கூறுதலாம் என்றவாறு.

 

வரலாறு:

    

     ‘கற்பா லுமிழ்ந்த மணியுங்கழு வாதுவிட்டால்

     நற்பா லழியும் நகைவெண்மதி போல்நிறைந்த

     சொற்பால் உமிழ்ந்த மறுவும்மதி யாற்கழுவிப்

     பொற்பா இழைத்துக் கொளற்பாலர் புலமைமிக்கார்.’

-         சிந்தா 4

 

எனவும்,

 

     ‘சுருக்கமில் கேள்வித் துகடீர் புலவர்முன் யான்மொழிந்த

     பருப்பொருள் தானும் விழுப்பொரு ளாம்பனி மாலிமையப்

     பொருப்பகஞ் சேர்ந்தபொல் லாக்கருங் காக்கையும்

                          பொன்னிறமாய்

     இருக்குமென் றிவ்வா றுரைக்குமன் றோஇவ் விருநிலமே.’

-         யா. கா. 3

 

எனவும் கூறியவாற்றான் உணர்க.

 

     இச்சூத்திரம் சீயநோக்காய் நின்றது.