பாட்டியல்
- நூற்பா எண் 129 |
289
|
இ - ள்: பாயிரமாவது எல்லா நூல்முகத்தும் உரைக்கப்படும்
பொதுப்பாயிரம் தன் நூற்கு இன்றியமையாச் சிறப்புப்பாயிரமும்
என
இரண்டு பகுதியினை உடைத்து என்றவாறு.
இதன்விதி எழுத்தோத்தினுள் கூறியவாற்றான்
உணர்க.
(129)
ஒத்த
நூற்பாக்கள்
‘பெயரார்நூ லீவோ னியல்பீயும் பெற்றி
அயராது கொள்வோ னளவும் - அயர்வின்றிக்
கோடல்மர பீரிரண்டும் கூறல்பொதுப் பாயிரமாம்
பாடல்சால் நூலின் பயன்.’
- வெண். பாட். பொ. 22
‘பயனான்காய் மூவகைத்தாய் பன்மூன் றுரைத்தாய்
இயலுடைத்தாய் மூவாம லேழு - செயல்மதத்தாய்ப்
பத்தாய்க் குணம்குற்றம் பத்தொழிந் தெண்ணான்காம்
உத்தியது நூலென் றுரை.’
- வெண். பாட். பொ. 23
உரைத்தநதி சீயமோ டொண்பருந்து தேரை
நிரைத்ததொழிற் சூத்திரத்தின் நின்று - விரைக்குழலாய்
செம்பொருள் ஞாபகமாஞ் செய்தி நியதியாம்
கம்பமிலா நூலின் கருத்து.’
- வெண். பாட். பொ. 24
‘கருத்தெச்சம் நுட்பம் பொழிப்பகலம் காட்டி
உரைத்த உதாரணமும் உண்டேல் - விருத்தியாம்;
பூண்ட கருத்தும்
பொழிப்பு முதாரணமும்
காண்டிகையென் றோதல் கடன்.’
- வெண். பாட். பொ. 25
‘கண்ணாய தெய்வம் இறைஞ்சிக் கருதுநூல்
பண்ண அதிகாரம் பாரித்தல் - எண்ணும்
மதியோர் சிறப்பென்பர் வானவரை வாழ்த்தா
அதிகார முஞ்சிறப்பென் றாக்கு.’
- வெண். பாட். பொ. 19
|