பாட்டியல்
- நூற்பா எண் 137 |
305 |
வடநூலார் கூறிய அவ்வியாத்தி அதிவியாத்தி
அசம்பவம் என்னும்
தூடணங்களும் இவற்றுள்ளே அடங்குமாறு
அறிந்து அடக்கிக்கொள்க.
(137)
விளக்கம்
அவ் வியாத்தி
- குன்றக்கூறல்.
அதி வியாத்தி
- மிகைபடக்கூறல்
அசம்பவம்
- மாறுகொளக்கூறல்.
இக்குற்றங்கள் பத்தனையும் சிதைவு என்று தொல்காப்பியனார்
குறிப்பிடுவார். இவற்றுள், கூறியது கூறல், மாறுகொளக்கூறல்,
மிகைபடக்கூறல், பொருளிலமொழிதல், மயங்கக்கூறல்
என்ற ஐந்தும்
பயன்படும் குற்றம்; இவை நூற்பாக்களில்
அருகிக் காணப்படலாம்;
ஆனால் ஏனைய ஐந்து குற்றங்களும்
அறவே வருதல் கூடாது
என்பதாம்.
ஒத்த
நூற்பாக்கள்
‘சிதைவுஎனப் படுபவை வசையற நாடின்..............
அன்னபிறவும் அவற்றுவிரி
யாகும்.’
- தொல். பொ. 663
‘குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
வழூஉச்சொல் புணர்த்தல் மயங்க வைத்தல்
வெற்றெனத் தொடுத்தல் மற்றொன்று விரித்தல்
சென்றுதேய்ந்து இறுதல் நின்றுபயன் இன்மை
என்றுஇவை ஈரைங் குற்றம் நூற்கே.’
- நன். 11
‘பொருள்நிலை கூறல் மருள்நிலைத்து ஆதல்
இன்னாச் சொற்பெறல் வெளிறுபட்டு அழிதல்
மொழிந்ததை மொழிதல் முரண்சொல் மொழிதல்
குறைபடக் கூறல் மிகைபட விளம்பல்
சந்த இன்பம் தழுவுதல் இன்மை
எதிர்மறுத்து உணர்த்தல் என்றிவை உளப்பட
கூறினர் ஈரைங் குற்றம் நூற்கே.’
- மாறன் 23
137
39-40
|