பாட்டியல் - நூற்பா எண் 142

 321


 

சூத்திரப் பொருள அன்றித் தொக்குப் புணரும் இயல்பும், குற்றியலுகர ஈற்றுச்
சொற்கள் நின்று புணரும் இயல்பும் இந்நூலுள் உயிரீற்றுப் புணரியலில்
கூறப்படுதலும்; அவர் சொல்லதிகாரத்தில் கூறிய கிளவியாக்கமும்
வேற்றுமையியலும் வேற்றுமை மயங்கியலும் விளிமரபும் இதன்கண்
பெயரியலுள் கூறப்படுதலும்; பொருளதிகாரத்தில் களவியலும்

கற்பியலும் பொருளியலும் மெய்ப்பாட்டியலும் அகத்திணையியலுள்
கூறப்படுதலுமாம் என்று உணர்க.

 

     2. படலத்தின் இலக்கணங்களை ஒரு சூத்திரத்தில்

தொகுத்தலாவது - எழுத்ததிகாரத்தின்,

 

     ‘எண்பெயர் முறை பிறப்பு’                                     

- இ. வி. 8

எனவும்,

 

    சொல்லதிகாரத்தின்,

 

    ‘தனிமொழி தொடர்மொழி’

 

எனவும்,                                                         - இ. வி. 160

 

  பொருளதிகாரத்தின்,

 

  ‘போக்கறு மரபின் பொருளெனப் படுவது’                      

   - இ. வி. பொ. 2

 

எனவும் கூறலாம் என்று உணர்க.

 

   3. ஓத்தின் இலக்கணம் ஒரு சூத்திரத்தில் கிடத்தலாவது,

 

     ‘மொழிக் காரணமாம்’                                         

- இ. வி. 3

 எனவும்,

 

   ‘எழுத்தே தனித்தும் இணைந்தும் தொடர்ந்தும்’ 
                    

 

- இ. வி. 38

 

எனவும்,

41-42