340                                 இலக
340

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

      ஓரறிவுயிரில் பைங்கூழும் பசும்புல்லும் இவ்விளமைப்பெயர் எய்தா
என்பதாம். இவை எல்லாம் சொல்பற்றி வந்த மரபு ஆகலின்
சொல்லோத்தில் கூறிய  மரபுள் அடங்கா என்க. 

  (150)

 

விளக்கம்

 

பார்ப்பு, பிள்ளை:

   

    ‘பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்று இளமை.’

                                            - தொல். பொ. 559

 

    ‘தவழ்பவை தாமும் அவற்றோ ரன்ன.’  

         ’’     560

 

பறழ், குட்டி :

 

    ‘மூங்கா வெருகுஎலி மூவரி அணிலொடு

      ஆங்கவை நான்கும் குட்டிக்கு உரிய..’ 

              ’’     561

 

    ‘பறழ் எனப் படினும் உறழ் ஆண்டு இல்லை.’       

        ’’    565

 

குருளை, குட்டி, பறழ் :

 

    ‘நாயே பன்றி புலிமுயல் நான்கும்

     ஆயுங் காலை குருளைக்கு உரிய.’         

             ’’     563

 

     ‘நரியும் அற்றே நாடினர் கொளினே.’     

               ’’     564

 

     ‘குட்டியும் பறழும் கூற்றவண் வரையார்.’        

          ’’     565

 

பிள்ளை :

 

    ‘பிள்ளைப் பெயரும் பிழைப்பு ஆண்டு இல்லை

     கொள்ளுங் காலை நாய்அலங் கடையே.’   

         ’’     566

 

மறி, குட்டி :

   

    ‘யாடும் குதிரையும் நவ்வியும் உழையும்

     ஓடும் புல்வாய் உளப்பட மறியே.’          

           ’’     567

 

    ‘கோடு வாழ் குரங்கும் குட்டி கூறுப.’     

              ’’     568