பாட்டியல்
- நூற்பா எண் 151, 152 |
343 |
ஒத்த
நூற்பா
முழுதும் - தொல். பொ.
581 பே
151
அறுவகை
அறிவுகள்
912.
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே;
இரண்டறி வதுவே
அதனொடு நாவே;
மூன்றறி வதுவே அவற்றொடு
மூக்கே;
நான்கறி வதுவே
அவற்றொடு கண்ணே;
ஐந்தறி வதுவே அவற்றொடு
செவியே;
ஆறறி வதுவே அவற்றொடு
மனன்என
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தனரே.
இஃது
உயர்ந்த ஒழுக்கமும் அல்லவாகிய ஒழுக்கமும் நிகழ்தற்கு
ஏதுவாகிய
அறிவின் திறம் கூறுகின்றது.
இ - ள்: ஓரறிவாவது தன்னின் வேறாய பிறிதொன்று
மெய்யுறலான்
வன்மை மென்மை முதலியன அறிதலாம்;
இரண்டறிவாவது அதனொடு
வாயால் சுவையை அறிதலாம்;
மூவறிவாவது அவ்விரண்டு அறிவுடனே
மூக்கால் கந்தத்தினை
அறிதலாம்; நான்கறிவாவது அம்மூவகை அறிவுடனே
கண்ணால்
உருவத்தினை அறிதலாம்; ஐந்தறிவாவது அந்நால்வகை
அறிவுடனே செவியால் சத்தத்தினை அறிதலாம்; ஆறறிவாவது
ஐவகை
இந்திரியங்கள் அறியும் அறிவான் அன்றி ஞாபக
ஏதுக்களான் நுண்ணிய
பொருள்களை மனத்தான் உணர்தலாம்;
என்று நேர்மையான் எல்லாப்
பொருள் மரபினையும்
உணர்ந்தோர் இவ்வாறு பிறழாமல் கூறுக என்று
காட்டினார்
என்றவாறு.
(152)
|