346 |
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
‘நந்தும் முரளும் ஈரறி வினவே;
பிறவும் உளவே அக்கிளைப்
பிறப்பே.’
-
தொல். பொ. 584
‘சிதலும் எறும்பும் மூவறி வினவே;
பிறவும் உளவே அக்கிளைப்
பிறப்பே.’
’’ 585
‘நண்டும் தும்பியும் நான்கறி வினவே;
பிறவும் உளவே அக்கிளைப்
பிறப்பே.’
’’ 586
‘மாவும் மாக்களும் ஐயறி வினவே;
பிறவும் உளவே அக்கிளைப்
பிறப்பே.’
’’ 587
‘மக்கள் தாமே ஆறறி வுயிரே;
பிறவும் உளவே அக்கிளைப்
பிறப்பே.’
’’ 588
153
புறனடை
914. அக்கிளைப் பிறப்பும்அவ் வறிவுறும் என்ப.
இது
மேலனவற்றிற்கு ஒருபுறனடை கூறுகின்றது.
இ - ள்: மேற்கூறிய அறுவகை அறிவுறும் உயிர்கட்கு
உரிய கிளையும் பிறப்பும் அவ்வவ்வறிவுபெறும் என்று
கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
(154)
விளக்கம்
ஓரறிவு
:
கிளை - புதலும்
கொடியும் போல்வன.
பிறப்பு -
மக்கட்குழவியும் விலங்கின் குழவியும் ஓரறிவின
வாகிய
பருவமும், என்பில் புழுவும் முதலியன.
ஈரறிவு :
கிளை
- கிளிஞ்சிலும்
முற்றிலும் முதலாகிய கடல்வாழ்
சாதியும்
பிறவும்.
பிறப்பு -
மக்கட் குழவியும் விலங்கின் குழவியும் ஈரறிவாகிய
பருவம்.
|