360
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம்
|
‘ஏத்திய பூவைநிலை எல்லோன் கழல்வாழ்த்தல்
காத்தல்முடி சூட்டல் களம்வேட்டல் - தீத்தொழில்கள்
வெண்குடைசெங் கோல்கவரி வெற்றியரி யாசனமும்
மண்குலவு மன்னர் வளம்.’
- வெண். பாட். பொ. 14
‘பூவைநிலை பகலோன் கழல் போற்றல்
புனைதல்முடி
தேவர் உவமை சிங்காசனம் செங்கோல் குடைகவரி
காவல் நிகழ்த்தல் எரிவேட்டல் ஓதல் கலமுதல
மேவல் அடுகளம் வேட்டல் பண்பாயின வேந்தர்கட்கே.’
- நவ. 73
‘விளங்கிய நூல்கற்றல் வேத நெறிநின்று அறுசமயம்
உளம்கொண்டு போற்றல் அமைச்சர் உரைகொளல் ஓர்ந்துகுடி
தளர்ந்தன தாங்கல் முறைமை கோடாது தனம்பெருக்கல்
அளந்து பெரும்படை சேர்த்தல் அரசர்க்கு அடுத்தனவே.’
- நவ. 74
165
வணிகர்
இயல்
926.
வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை
இதுவும்
அது.
(166)
விளக்கம்
‘வைசிகன் வாணிகத்தால் வாழும் வாழ்க்கையைப்
பெறும்’ - உரை.
‘வணிகர்க்குத் தொழிலாகிய வணிக வாழ்க்கை
உள்ளுறையாகச
செய்யுள் செய்தல் பெரும்பான்மையும்
ஆம் என்றவாறு.- பேரா.
தொல்காப்பியனார் ‘பயறு
உளுந்து கடுகு கடலை எள் கொள் அவரை
துவரை என்ற எண்வகை
உணவுப் பண்டமும் செய்து
விளைத்தலும் அவர் கடன்’
என்ற கருத்துப்பட,
‘மெய்தெரி வகையின் எண்வகை உணவின்
செய்தியும் வரையார் அப்பா லான’
-
தொ. பொ. 633 பே.
என்ற
நூற்பாவும் யாத்துள்ளார்.
|