பாட்டியல்
- நூற்பா எண் 171 |
365 |
கமகன்
இலக்கணம்
931.
நிறைந்த கல்வியான் நிறைந்த அறிவான்
அறைந்த ஒருபொருள் அதனை விரிக்க
வல்லவன் கமகன் சொல்லுங் காலே.
இது
கமகன் இயல்பு கூறுகின்றது.
இ - ள்: நிறைந்த கல்விப் பயிற்சியானும் அக்கல்விப்
பயிற்சியால்
தெளிந்த அறிவானும் முன்னர்க் கற்று
வல்லோர் கூறிய பொருளை
ஞாபகத்தானும் செம்பொருள்
நடையானும் நேரிட்டு எந்நூற் பொருளையும்
விரித்துச் சொல்லவல்லோன் கமகன் என்றவாறு.
(171)
விளக்கம்
ஞாபகம் - அறிவான் கூறப்படாத செய்தியையும்
நுனித்து அறிதல்.
செம்பொருள் நடையான் அறிதல் - நூலுள் கூறப்பட்ட
செய்தியைக் கூறப்பட்டவாறு திரிபின்றி அறிவது.
முன்னதற்கு நிறைந்த கல்விப் பயிற்சியும்
பின்னதற்குத் தெளிந்த அறிவும் பயன்படும்.
எனவே கமகன் சிறந்த போதகாசிரியன் ஆவான்
என்பது.
ஒத்த
நூற்பாக்கள்
‘நிறைமதியான் கல்வியான் நீள்கலைகள் கல்லா
தறையு மவன்கமக னாகும்.’
- வெண். பாட். செய்.
46
‘நாட்டிய அரும்பொருள் செம்பொருள் நடையாக்
காட்டியே வியவ கரிப்போன் கமகன்.’
- பி. ம. 52
‘ஞாபகம் செம்பொருள் நடையின்எப் பொருளும்
அறைகுவோன் கமகனாம் வழுத்துங் காலே.’
- மு. வீ. யா. ஒ. 62
171
|