368
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம்
|
என்னும்
வீட்டிற்கு ஏதுவாகிய உபாயங்களைக் கூறவே வீடும் கூறினானாம்
என்பது.
(173)
விளக்கம்
செஞ்சொல் - வெளிப்படையாக விளக்கிக்
காணும் சொல். வீடுபேறு
துறவமாகிய காரண வகையால்
கூறப்படுவது அல்லது, உலகிலுள்ள
தேயங்களைப்போல்
இலக்கண வகையால் பரப்பு, இயற்கை அமைப்பு
முதலிய
கூறப்படாதது ஆதலின் வீடுபேறு எய்துதற்கு உரிய ஏதுக்களே
கூறப்படும்.
கேள்வி - அனுபவப்பொருளை ஞானதேசிகர்
பால் உபதேசம் கேட்டல்.
விமர்சம் - அச்செய்தியை ஆராய்ந்து
தெளிதல்.
பாவனை
-
அத்தெளிந்த பொருளைத் தியானம் செய்தல்.
‘கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.’
- குறள். 356
என்பது
கேள்வியையும்.
‘ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.’
- குறள். 357
என்பது
விமரிசத்தையும்.
‘பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்ப தறிவு.’
- குறள். 358
என்பது
பாவனையையும் விளக்கும். இக் குறட்பாக்களுக்கும்
பரிமேலழகர்
வரைந்துள்ள உரையையும் நோக்குக.
எனவே. ஞானாசாரியனே வாக்கி எனப்படுவான்.
ஒத்த
நூற்பாக்கள்
‘நவிலும் அறம்முதல் நான்கு மயங்காமல்
புவியதனில் நேட்டோர் புகழக் - கவிப்பனுவல்
குன்றாத சொல்லால் தெளிவுபெறக் கூறுவோன்
நன்றாய வாக்கியென் றார்.
- வெண். பாட். செ.
47
|