பாட்டியல் - நூற்பா எண் 173 - 175

369


 

      ‘அறம்முதல் நாற்பொருள் பயனும் அத்திறத்தில்

     கேட்கவே திறம்படப் பாடுவோன் வாக்கி.’   

 - பி. ம. 54

 

     ‘அறம்பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கும்

     கேட்போர் வேட்ப இனியன கிளத்தும்

     ஆற்றல் உடையோன் வாக்கியாம் எனலே.’

    

 - மு. வீ. யா. ஒ. 64

                                                      173

 

சோரகவி, சாத்துக்கவி, பிள்ளைக்கவி,

வெள்ளைக்கவி இன்னார் என்பது

 

934.  ஒருவன் பாவேறு ஒருவற்கு உரைத்து

      வருமவன் சோர கவி; மற்று ஒருவன்

      பாஇசைக்கு ஒப்ப மேவி உரைப்போன்

      சாத்துக் கவிஎனப் பாத்தனர் புலவர்.         

174

 

935.  முன்னோர் பாடிய யாப்பினுள் கிடந்த

      சின்மொழி கொண்டு செய்யுள் செய்யுந்

      தன்மையன் பிள்ளைக் கவி; புன் மொழியால்

      கரைவோன் வெள்ளைக் கவியா மென்க.         

175

 

இவை இரண்டு சூத்திரமும் பொருள் விளங்கக் கிடந்தன. புலவர் இயல்
முற்றும்.

விளக்கம்

 

     ஒருவன் பாடிய பாடலைத் தான் பாடியதாகக் கொண்டு மற்றவனிடம் கூறிவருபவன் சோரகவி ஆவான்; ஒருவன் பாடிய பாஇசைக்கு ஒப்பப் பொருந்திப்பாடுபவன் சாத்துக்கவி ஆவான்.

    

     சான்றோர் செய்யுள் அடிகள் பலவற்றை எடுத்துக்கொண்டு தான் சிறிதளவு இயற்றிப் பாடல் அமைப்பவன் பிள்ளைக்கவி ஆவான். கொச்சையான சொற்களைக் கொண்டு பாடுவோன் வெள்ளைக்கவி ஆவான்.