370 |
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
ஒத்த
நூற்பா
‘ஆர் ஒருவன் பாக்களை ஆங்கொருவ னுக்களிப்போன்
சோர கவி, சார்த்(து) ஒலியின் சொல்லுபவன், -
சீரிலாப்
பிள்ளைக் கவி சிறந்த பின்மொழிக்காம்;
புன்மொழிக்காம்
வெள்ளைக் கவி யவனின் வேறு.’
-
வெண். பாட். செ. 48
[ஒருவன் பாட்டை மற்றொருவனுக்கு கொடுப்போன்
கள்ளக் கவியாம்.
ஒருவன் கவியிசையில் வேறொரு செய்யுள்
புணர்ப்போன் சார்த்துக் கவியாம்.
தனக்கென ஒன்றின்றி
முன்னோர் மொழிந்த சொல் நடை பொருள் நடை
கண்டு
கவிபாடுவோன் பிள்ளைக்கவியாம்.
புன்மொழிகளால் ஒன்றும்
கவிபாடுவோன் வெள்ளைக்
கவியாம்.]
174 - 175
நல்லவை
நிறையவை இலக்கணம்
936.
ஆறுஉட் பகைசெற்று அருங்கலை ஓர்ந்து
பாரில் கீர்த்தி படைத்தோர் வைகுதல்
நல்லவை; அடக்கம் வாய்மை நடுநிலை
சொல்லும் நன்மை உடையோர் தொகைஇ
வல்லார் மொழியினும் வல்லுநர் ஆக்கிக்
கேட்போர் உறைஅவை நிறைஅவை ஆகும்.
இது
நல்லவை நிறையவை இரண்டன் இயல்பும் கூறுகின்றது.
இ - ள்: காமம் குரோதம் உலோபம் மோகம் மதம்
மாற்சரியம்
என்னும் உட்பகை ஆறனையும் அடக்கி, அரியவாகிய
அறுபத்துநாலு
கலைகளையும் ஐயம் திரிபு அறஆராய்ந்து,
அதனால் புவியின்கண் பிறத்தற்
பயனாகிய புகழ்பெற்றோர்
இருக்கலுறும் அவை நன்மையுடைய அவையாம்.
|