380                      இலக
380

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

     நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

    போற்றாது புத்தேள் உலகு.’                

- குறள் 234

 என வள்ளுவனார் கூறியவாற்றானும்,

 

    ‘புலவர் பாடும் புகழ்உடையோர் விசும்பின்

    வலவன் ஏவா வான ஊர்தி

    எய்துப என்பதம் செய்வினை முடித்தே.’       

- புறநா. 27

  என இருமைப் பயனும் கூறியவாற்றானும் ஓர்ந்து உணர்க.    

(180)

 

ஒத்த நூற்பாக்கள்

 

    ‘அழகாக முன்மொழிக்கண் ஆராய்ந் தனவும்

     அழகாகச் சொல்லினவும் அன்றி - அழகாகச்

     செய்யுட்கு உரைத்தனவும் எல்லாம் செயிர்தீரச்

     செய்யின்நன்(று) அன்றாயின் தீது.’     

                                      - வெண். பாட் பொ. 27

    ‘தீதிலா நூல்உரைத்த தீதிலாச் செய்யுளைத்

     தீதிலோர் நல்லவையில் சேர்த்ததன்பின் - ஆதிசொல்

     பாவிற்கு இயைய உரைக்கின் பலபொருளும்

     தாவில் பொருளோடும் சார்ந்து.’        

             ’’     28

 

    ‘நன்குணர்ந்தோர் ஆய்ந்த தமிழ்நூலின் நன்னெறியை

     முன்புணர்ந்து பாட்டியல்நூல் முற்றுணர்ந்து - பின்புணரும்

     நல்லார்முன் நல்லாய் நலமார் கவிஉரைக்க

     வல்லாதல் அன்றோ மதி.’              

         ’’    30

 

    ‘உடம்படச்செய் யான்செய்யுள் பிறன்பால் கூறின்

          உற்றதிரு அவனிடைப்போய் ஒதுங்கும்; அன்றித்

     திடம்பெறச்செய் யுள்வரைந்து செம்பூச் சூட்டித்

          தெருவுமயா னம்புற்றுக் காளி கோட்டத்

     திடந்தனிலங் கவன்தன்னை நினைந்து சுட்டால்

          ஈராறு திங்கள்தனின் இறுதி ஆவான்;