380
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம்
|
‘நிலவரை நீள்புகழ்
ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.’
- குறள் 234
என
வள்ளுவனார் கூறியவாற்றானும்,
‘புலவர் பாடும் புகழ்உடையோர்
விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி
எய்துப என்பதம் செய்வினை முடித்தே.’
- புறநா. 27
என
இருமைப் பயனும் கூறியவாற்றானும் ஓர்ந்து உணர்க.
(180)
ஒத்த
நூற்பாக்கள்
‘அழகாக முன்மொழிக்கண் ஆராய்ந் தனவும்
அழகாகச் சொல்லினவும் அன்றி - அழகாகச்
செய்யுட்கு உரைத்தனவும் எல்லாம் செயிர்தீரச்
செய்யின்நன்(று) அன்றாயின் தீது.’
- வெண். பாட் பொ. 27
‘தீதிலா நூல்உரைத்த தீதிலாச் செய்யுளைத்
தீதிலோர் நல்லவையில் சேர்த்ததன்பின் -
ஆதிசொல்
பாவிற்கு இயைய உரைக்கின் பலபொருளும்
தாவில் பொருளோடும் சார்ந்து.’
’’ 28
‘நன்குணர்ந்தோர் ஆய்ந்த தமிழ்நூலின் நன்னெறியை
முன்புணர்ந்து பாட்டியல்நூல் முற்றுணர்ந்து -
பின்புணரும்
நல்லார்முன் நல்லாய் நலமார் கவிஉரைக்க
வல்லாதல் அன்றோ மதி.’
’’ 30
‘உடம்படச்செய் யான்செய்யுள் பிறன்பால்
கூறின்
உற்றதிரு அவனிடைப்போய் ஒதுங்கும்; அன்றித்
திடம்பெறச்செய் யுள்வரைந்து செம்பூச் சூட்டித்
தெருவுமயா னம்புற்றுக் காளி கோட்டத்
திடந்தனிலங் கவன்தன்னை நினைந்து சுட்டால்
ஈராறு திங்கள்தனின் இறுதி ஆவான்;
|