88
|
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் |
‘பலஒன்று ஆகிய இனம்எனப் பட்டன
கலித்தொகை குறுந்தொகை நெடுந்தொகை முதலன.’
- பன். பாட். 160.
‘பலஒன் றாகிய இனம்எனப் பட்டன
கலம்பகம் மும்மணிக் கோவைமுத லாயின.’ - 161.
‘மும்மணிக் கோவையும் பன்மணி மாலையும்
மறமும் கலிவெண் பாட்டும் மடல்ஊர்ச்சியும்
பாசண்டத் துறையும் கிரீடையும் கூத்தும்
விருத்தக் கவிதையும் இயல்இசை நாடகத்தொடு
விரித்துப் பாடுவது வித்தார கவியே.’
- திவா. 12 - 51
‘பாங்கார் தொடர்நிலைப்பாப் பல்பாதம் சேர்தனிப்பா
ஈங்ககலப் பாக்கள் இரண்டாகும்; - ஆங்குத்
தொடர்நிலைப்பா வின்விகற்பம், சூழ்வளையாய்! சொல்லின்,
கடையிலவே என்றுரைத்தார் கண்டு.’
- வெண். பா. செ. 5.
‘தொடர்நிலை தொகைநிலை தொடுத்தபல் பாவும்
தொடைபல வாகத் தொடுத்தஒரு பாவும்
வித்தாரக் கவியென விளம்பினர் புலவர்.’
- தொ. வி. 299.
‘மறம்கலி வெண்பா மடலூர்தல் இயல்இசை
பாசண் டத்துறை பன்மணி மாலை
தசாங்கம் மும்மணிக் கோவை கிரீடை
இவைமுத லியவிரித்து இசைத்துப் பாடுவோன்
வித்தா ரக்கவி யாம்விளம் பிடினே.’
- மு. வீ. யா. ஒ. 59
7
தொடர்நிலைச் செய்யுள்
768. அவற்றுள்,
தொடர்நிலை விகற்பம் கடையில என்ப.
இது முதற்கண் நின்ற தொடர்நிலைச் செய்யுட்கு ஆவதொரு புறனடை கூறுகின்றது.
|