18 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்


     வாடுறு நறவின் சாடி தோறுங்
     கொள்வினை மாற்றாக் கொடையொடு
     கள்விலை யாட்டியுங் கைதூ வாளே”
                                       [தொல். பொ. புறத். 3. நச்.]
எனவரும்.

   
 25. கொடைக்குச் செய்யுள்:-

    
“கொடைத்தொழி லெல்லாங் குறைவின்றிப் பண்டே
     முடித்தன னென்றிருந்த மூத்தோன்-கொடைக்கு
     வரம்பில னென்றே மருண்டா னிரைகோட்
     கரந்தையங் கண்ணியாற் கண்டு
                                       [தொல். பொ. புறத். 3. நச்.]
எனவரும்.

    
26. துடிநிலைக்குச் செய்யுள்:-

   
 “நித்திலஞ்செய் பட்டமு நெற்றித் திலதமு
     மொத்திலங்க மெய்ப்பூசி யோர்ந்துடீஇத்-தத்தந்
     துடியரோ டூர்ப்புறஞ் சூழ்ந்தார் மறவர்
     குடிநிலை பாராட்டிக் கொண்டு”
      [தொல். பொ. புறத். 4. நச்.]

எனவரும்.
 

     27. கொற்றவைநிலைக்குச் செய்யுள்:-

   
 “அருமைத் தலைத்தரு மாநிரையு ளையை
     யெருமைப் பலிகோ ளியைந்தா-ளரசனும்
     வேந்தன்மேற் செல்வான் விறல்வஞ்சி சூடானென்
     றியாந்தன்மேற் சீறாம லின்று”
       [தொல். பொ. புறத். 4. நச்.]

எனவரும்.                                                   (6)

                     
2. வஞ்சித்திணை

         605. வஞ்சி தானே முல்லையது புறனே
             யெஞ்சா மண்ணசை வேந்தனை வேந்த
             னஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே. * 

      இது வஞ்சித்திணை முல்லைத்திணைக்குப் புறனென்பதூஉம் அதன்
பொருளுங் கூறுகின்றது.

      (இ - ள்.) மேற்கூறிய புறத்திணை ஏழனுள் வஞ்சித்திணை முற்கூறிய
அகத்திணை ஏழனுள் முல்லைத்திணைக்குப் புறனாம்;

 
 * தொல். புறத்திணை. 6 (இ)