29. தொடர்ந்தெயில்கொண்டோன் சூழ்மதில்வேந்தன்
மடந்தையை வேண்டி மகட்பாலிகலுக்குச்
செய்யுள்:-
“அந்தழை யல்குலு மாடமை மென்றோளும்
பைந்தளிர் மேனியும் பாராட்டித்-தந்தை
புறமதில் வைகும் புலம்பே தருமே
மறமதின் மன்னன் மகள்” [பு. வெ. உழி. 29]
எனவரும்.
30. தூவடிவேலவன் தொகுத்த நிதியளந்து சேவடிவணங்கத்
திறைகொண்டு பெயர்தற்குச் செய்யுள்:-
“கோடும் வயிரு மிசைப்பக் குழுமிளை
யூடெரி வேய வுடன்றுலாஅய்ப்-பாடி
யுயர்ந்தோங் கரணகத் தொன்னார் பணியப்
பெயர்ந்தான் பெருந்தகையி னான்” [பு. வெ. உழி. 30]
எனவரும்.
31. பேணாமன்னர் பெருமறங்காற்றி ஆணைபோக்கி அடிப்பட
விருத்தற்குச் செய்யுள்:-
“ஒன்றி யவர்நா டொருவழித்தாய்க் கூக்கேட்ப
வென்றி விளையா விழுமதிலோ-ரென்றும்
பருந்தார் செருமலையப் பாடி பெயரா
திருந்தா னிகன்மறவ ரேறு” [பு. வெ. உழி. 31]
எனவரும்.
32. எம்மதிலுள்ள இகலுடைவேந்தரும் அம் மதிலடியின்
அடைந்த தொகைநிலைக்குச் செய்யுள்:-
“நாவல் பெயரிய ஞாலத் தடியடைந்
தேவ லெதிரா திகல்புரிந்த-காவலர்
வின்னின்ற தானை விறல்வெய்யோற் கம்மதிலின்
முன்னின் றவிந்தார் முரண்”
[பு. வெ. உழி. 32]
எனவரும். (10)
உழிஞை : அரண் காத்தல்
609. ஏப்புழை ஞாயி லேந்துநிலை யரணங்
காப்போர் நொச்சிப் பூப்புனை புகழ்ச்சியுந்
துண்ணென வரூஉந் தூசு தாங்கி
இ. வி.-23 |